Quantcast
Channel: பாமரன்
Viewing all 103 articles
Browse latest View live

வாலிப வயோதிக அன்பர்களே…..

$
0
0

 

வாலிப வயோதிக அன்பர்களே…..

இல்லறக் கடமைகள்….

அலுவலகக் கடமைகள்…..

அந்தரங்கக் கடமைகள்…. 

அனைத்தும் முடிந்த பிற்பாடு கூட நேரம் ஏதாவது மிச்சம் இருப்பின்…. சன்நியூஸ் தொலைக்காட்சியில் நான் பங்கேற்ற இந்நிகழ்ச்சியைப் பார்க்கக்கடவீர்களாக : 

http://www.youtube.com/watch?v=C16yH5bA8nE



பாழாய்ப்போன அந்தப் பெரியாருக்கு இது புரியாமல் போயிற்றே…..

$
0
0

அநேக அசடுகள் திராவிட இயக்கங்கள் என்பவை எவை? திராவிடக் கட்சிகள் என்பவை எவை? என எதுவும் புரியாமல் எப்படிப் புலம்பித் திரிகின்றன…..

திராவிடர் இயக்கத்திற்கும் திராவிட கட்சிகளுக்கும் இடையே பண்பாட்டுத் தளத்தில்…. செயல்பாட்டுத்தளத்தில்….. அணுகுமுறைகளில்…. உள்ள  எண்ணற்ற வேறுபாடுகள் எவையெவை? என்பது குறித்த போன இதழ் கட்டுரைக்கு எதிர்பாராத திசையில் இருந்தெல்லாம் வந்த  வரவேற்பைக் கண்டு கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனேன்.

ஒரு ”மென்மனதுக்குச் சொந்தக்காரர்” என்று போன இதழில் குறிப்பிட்டிருந்தது வேறு எவரையுமல்ல வண்ணநிலவன் எனும் திருநாமம் பூண்ட துர்வாசரைத்தான்.

இதோ….இனி அன்னாரது அருள்வாக்குகளைச் சற்று அவதானிப்போம்.

அருள்வாக்கு  1 :

”திராவிடம் ஆரியம் என்ற கருத்துக்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய கருத்தாக்கமே. திராவிடம் என்ற கருத்து கட்டமைக்கப்பட்டது.”

திராவிடம் ஆரியம் என்பதையே அந்நியர்தான் உருவாக்கினார்கள் என்றால் சாதிக்கொரு நீதி வைத்து மக்களைக் கூறுபோட்ட மனு (அ)தர்மத்தை உருவாக்கியவன் எந்த ஆங்கிலேயன்?

ஆங்கிலேயர்கள் உருவாக்கியது என்றால் அதற்கும் பல நூற்றாண்டுகள் முன்னரே “பறைச்சியாவதேதடா…. பணத்தியாவதேதடா?” என்று பொட்டில் அடித்தது போல் பதினெண் சித்தர்கள் கேள்வி எழுப்பியது எவரை நோக்கி? எதன் பொருட்டு?

கடந்த நூற்றாண்டின் மத்தியப் பகுதி வரையிலும் கூட ஓட்டல்களில் “பிராமணாள் – இதராள்” என மக்களைக் கூறுபோட்டு பிரித்து உட்கார வைத்தது  யார் போர்ச்சுக்கீசியரா? பிரிட்டிஷ்காரர்களா? அந்த “இதராளுக்கு” என்ன பெயர்?

கோயில்களின் கர்ப்பக்கிரகத்துக்குள் ”நாங்க மட்டும் உள்ளே… மத்தவா வெளியே” என  உள்ளே-வெளியே விளையாட்டை விளையாடியது…. இன்னும் விளையாடிக் கொண்டிருப்பது ஆங்கிலேயரா? அய்ரோப்பியரா?

சூரியன் மறையாத தேசத்துக்காரர்கள் வருகைக்கு முன்பிருந்தே கல்வியில்…. வேலையில்…. கருவறையில்….. என சகலத்திலும் 97 சதவீத மக்களுக்கு எதையும் பகிர்ந்தளிக்காமல் உங்களூர் அல்வாவை தவணை முறையில் தந்தவர்கள்…. தந்து கொண்டிருப்பவர்கள் யார்? அயர்லாந்துக்காரர்களா? ஆப்பிரிக்கர்களா?

” ’ஆரியராவது, திராவிடராவது? அதெல்லாம் இன்றில்லை’ என்பீர்கள். இங்கே வாருங்கள்; பேசாமல் மேல் துண்டு போட்டுக் கொண்டு நாலு வருணத்தாரும் கோயிலுக்குப் போங்களேன்! பார்ப்பான் உங்களையெல்லாம் ஒரே இடத்தில் விட்டுவிட்டு உள்ளே நுழைகிறானா இல்லையா பாருங்களேன்!” என்ற பெரியாரின் கேள்விக்கான விடை இன்றும் எவரிடமிருக்கிறது?

அருள்வாக்கு  2:

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் என்று கால்டுவெல் சொன்னதையே கிளிப்பிள்ளை போல் வழிமொழிந்தார் மனோண்மணியம் சுந்தரம் பிள்ளை.” இதுவும் அன்னாரது அறிவார்ந்த கூற்று.படம்

ஆக திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என ஆராய்ந்து எழுதிய கால்டுவெல்லுக்கும் ஆராய்ச்சி அறிவில்லை…. மனோண்மணியம் சுந்தரனாருக்கும் சொந்த புத்தி கிடையாது என்கிறார் இந்த மாமேதை. ஆக திராவிடத்தின் மீதே இந்தப் பாய்ச்சல் பாய்பவருக்கு அடுத்து வரும் வரிகளான ”ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!” என்பதை கேட்கும்போது எந்த இடத்தில் எரிச்சல் ஏற்படும்

அருள்வாக்கு  3:

“காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி அடைந்த ஈவெரா தனியாகக் கட்சி ஆரம்பித்தபோது, நீதிக்கட்சியின் கொள்கைகளையே சுவீகரித்துக் கொண்டு திராவிடர் கழகம் என்று தனது கட்சிக்குப் பெயர் வைத்தார்.”

அடப்பாவி…. காங்கிரஸ் கட்சியில் எதற்காக அதிருப்தி அடைந்தார்? மனைவி நாகம்மையாருக்கு எம்.பி,. சீட் கொடுக்கவில்லை என்றா? அல்லது தங்கை கண்ணம்மாவுக்கு கட்சித்தலைவர் போஸ்ட் கொடுக்கவில்லை என்றா?

காங்கிரஸ் உறுப்பினர் ஆன காலம் தொட்டே கல்வியிலும் வேலையிலும் நியாயமான ஒதுக்கீடுகள் மறுக்கப்பட்டு நாயினும் கீழாய் வறுமையிலும் துயரிலும் துவண்டு கிடந்த ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர் மட்டுமன்றி பிற பிராமணரல்லாதோருக்கும் கிடைக்கவேண்டிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்காக அவரது குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டுதானே இருந்தது.

1919 இல் திருச்சி… 1920 இல் நெல்லை…. 1921 இல் தஞ்சை….. 1922 இல் திருப்பூர்…. 1923 இல் மதுரை… 1924 இல் திருவண்ணாமலை…. என சகல ஊர்களிலும் கூடிய காங்கிரஸ் மாநாடுகளில் பெரியார் கொண்டுவந்த இடஒதுக்கீட்டுத் தீர்மானம் கண்டுகொள்ளப்படக்கூட இல்லை. இறுதியாக 22.11.1925 இல் காஞ்சிபுரம்  காங்கிரஸ் மாநாட்டிலும் தந்தை பெரியார் கொண்டு வந்த வகுப்புவாரி உரிமைக்கான தீர்மானம்…. நிராகரிக்கப்பட்டது. அதன் விளைவு…..?

”இனி காங்கிரசை ஒழிப்பதே என் முதல் வேலை” என்று அன்று காங்கிரசை விட்டு வெளியேறினார் பெரியார். 97 சதவீதம் கொண்ட இந்த மக்களுக்காக எவ்வளவு நீண்ட நெடிய போராட்டங்கள் நடத்தி அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராய் பயனின்றிப் போக மனம் நொந்து வெளியேறிய பெரியாரை ஏதோ சொந்த நலன்களுக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் கட்சி மாறியவரைப் போல சித்தரிப்பதை என்னென்பது?

சரி போனதுதான் போனார் எப்பொழுது போனார் 1925 இல் போனார். போனதும் தனியாகக் கட்சி ஆரம்பித்து விட்டாரா? அதுவும் நீதிக்கட்சியின் கொள்கைகளை சுவீகரித்துக் கொண்டு? காங்கிரசை விட்டு வெளியேறியது 1925 இல். திராவிடர் கழகம் ஆரம்பித்தது 27.8.1944 இல். ஏறக்குறைய 19 ஆண்டுகள் இடையில். சுயமரியாதை இயக்கம்…. உண்மை நாடுவோர் சங்கம்…. தாராளச் சிந்தனையாளர் கழகம்…. சமதர்மச் சங்கம்…. பகுத்தறிவாளர் கழகம் என பல வடிவங்களில் மக்களுக்கான தனது பணிகளைத் தொடர்ந்து முடிவாக திராவிடர் கழகம் என்று இயக்கம் கண்டது 1944 ஆம் ஆண்டு. ஏதோ திமுக வில் இருந்து அதிமுக வுக்கும்…. காங்கிரசில் இருந்து பாஜக வுக்கும் பயணப்படும் ஓட்டுக்கட்சிக்காரர்களைப் போல மலிவாகச் சித்தரிக்கிறாரே இவர்…. இது எந்தவிதத்தில் நியாயம்?

தந்தை பெரியார் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராகக் கடுமையாக குரல் கொடுத்துக் கொண்டிருந்த அதே வேளையில் பெண்களின் திருமண வயதை 10 லிருந்து 12 ஆக உயர்த்தும் சட்டத்தை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தார்கள். அச்சட்டம் 1929 இல் நிறைவேறியபோது…. அதை எதிர்த்து….

“இது நமது தேசியப் பண்பின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்” என குழந்தைத் திருமணங்களை நியாயப்படுத்தி பெண்ணினத்தையே புதைகுழியில் தள்ளும் திருப்பணியை மேற்கொண்டிருந்தார் ஒரு மகத்தான ”தேசபக்தர்”. அவர் வேறு எவருமல்ல. சாட்சாத் பாலகங்காதர திலகர்தான்.

மன்னர்களைத் துதிபாடித் திரிந்த புலவர்களையும், பண்டிதர்களையும் சகட்டுமேனிக்குச் சாடிய பெரியார்தான்….. பிள்ளைக்கறி சமைத்துப் போட்ட புராணப் புளுகுகளைத் தவிர தமிழில் என்ன இருக்கிறது என்று சீறிய அதே பெரியார்தான்…. நம் இன்றைய தமிழின் எழுத்துச் சீர்திருத்தத்தை நமக்கு அளித்தவர். இன்று அவரைத் திட்டி எழுதும் கட்டுரைக்குக்கூட UNICODE FONT ஆகத் துணை நிற்பது அவர் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தம்தான்.

ஆங்கிலத்தின் அவசியத்தை அறிவுறுத்திய அதே பெரியார்தான் “எதற்கடா இங்கு இன்னும் தெலுங்குக் கீர்த்தனைகள்?” என்று ஓங்கிக் குரல் கொடுத்து தமிழகமெங்கும் தமிழிசை விழாக்களை நடத்தியவர்.

“சுதேசமித்திரன்களும்…. இந்து பத்திரிக்கையும் கே.பி.சுந்தராம்பாளை ஏன் இருட்டடிப்பு செய்கிறார்கள்? அவர் படம்பிராமணப் பெண்மணி அல்ல என்கிற காரணத்தாலா?” என்று பெரியார் தாக்குதல் தொடுத்த பிறகே தமிழகப் பத்திரிக்கைகள் அவர் குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கின. இத்தனைக்கும் கே.பி.சுந்தராம்பாள் கொள்கை ரீதியாக பெரியாரோடும் திராவிட இயக்கத்தோடும் மாறுபாடு கொண்டு எதிரணியில் இருந்தவர்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரை அவர் நம்பிய தேசியக் கட்சியே

இறுதிக்காலத்தில் தெருவில் தவிக்கவிட்டபோது தனது மகனது வேலைக்காக உரிமையோடு கடிதம் எழுதியது தந்தை பெரியாருக்குத்தான். இத்தனைக்கும் இருவரும் இருந்த முகாம்கள் வெவ்வேறு.படம்

”கம்பராமாயணத்தின் இலக்கிய சுவையை உணரக் கூடிய அளவுக்கு திராவிட இயக்கத்தினருக்கு இலக்கிய அறிவு இல்லை. இலக்கியத்துக்காக இவர்கள் எதையும் செய்யவில்லை. திராவிட இயக்கங்கள் தமிழ் இலக்கியத்துக்கு அளித்தது எதுவுமில்லை” என இந்த ஆசாமி மட்டுமில்லை இவருக்கு முன்னரே ஏகப்பட்ட புண்ணியவான்கள் ”வாழ்த்துப் பா” வாசித்துவிட்டுப் போனது வரலாறு முழுக்க விரவிக் கிடக்கிறது.

உண்மைதான்.திராவிட இயக்கத்துக்கு இலக்கியச் சுவை கிடையாது…. இலக்கிய அறிவு கிடையாது…. இலக்கியத்துக்காக இவர்கள் எதையும் செய்யவில்லை…. உண்மைதான்.

நீங்கள் கம்பனின் இலக்கியச் சுவையைப் பருகிக் கொண்டிருந்த பொழுதுகளில் கைம்பெண்களின் மறுவாழ்வுக்காகப் போர்க்குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் பெரியாரும் திராவிட இயக்கத்தினரும்….

நீங்கள் சிலப்பதிகார மாதவியின் நாட்டிய அழகை சிலாகித்துக் கொண்டிருந்தபோது கோயில்களில் படம்தேவரடியார்களாக பொட்டுக்கட்டி விடப்பட்ட அபலைகளின் விடிவுக்காக தெருக்களில் இறங்கிக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் திராவிட இயக்கத்தினரும்….

நீங்கள் திருவாசகத்தின் ஒலிநயத்தில் பரவசத்தோடு கிறங்கிக் கிடந்தபோது ஒருவாசகம் கூட படிக்க இயலாமல் வக்கற்றுப் போன திராவிட குழந்தைகளுக்கு இரவுப் பள்ளிகளை நடத்திக் கொண்டிருந்தார்கள் திராவிட இயக்கத்தினர்.

நீங்கள் சிருங்கார ரசத்தோடு ”சீதா கல்யாணமே…” என  ராகம் மீட்டிக் கொண்டிருந்தபோது…..

”1921 வருடத்தைய இந்து கைம்பெண்களின் தொகையினை நோக்குகையில் அய்யகோ என் நெஞ்சு துடிக்கிறது….

1 வயதுள்ள விதவைகள்                                  597

1 முதல் 2 வயதுள்ள விதவைகள்               494

2 முதல் 3 வயதுள்ள விதவைகள்              1257

3 முதல் 4 வயதுள்ள விதவைகள்              2837

4 முதல் 5 வயதுள்ள விதவைகள்              6707

ஆக மொத்தம்                                                      11892

பால் மணம் மாறாத 5 வயதிற்குட்பட்ட இளம் குழந்தைகள் மட்டிலும்11892 பேர் இருக்கிறார்கள் என்பதையும், தன் பிறவிப்பயனையே நாடுவதற்கில்லாது…. இன்பம் துய்த்தற்கில்லாது அடக்கி வைக்கப்பட்டிருக்கும் 15 வயதிற்குட்பட்ட கைம்பெண்கள் 2,32,147 பேர் இருக்கிறார்கள் என்பதையும் கேட்கவே என் குலை நடுங்குகிறது. இத்தகைய படுமோசமான விதவைத் தன்மையை எந்த நாகரிக உலகம் ஏற்கும்?” என குதறப்பட்ட அந்த மானுடக் கூட்டத்துக்காக கதறித் துடித்துக் கொண்டிருந்தார் பெரியார்.

உண்மைதான்.திராவிட இயக்கத்துக்கு இலக்கியச் சுவை கிடையாது…. இலக்கிய அறிவு கிடையாது…. இலக்கியத்துக்காக இவர்கள் எதையும் செய்யவில்லை…. உண்மைதான்.

நாணும் பெண்ணாய் சலசலத்து ஓடும் தாமிரபரணியைச் சிலாகித்து நிற்கையில் நதியில் கொல்லப்பட்ட பதினேழு உயிர்களைப் பற்றிப் ”பிதற்றுகிற” பேர்வழிகளுக்கு என்ன இலக்கிய அறிவு இருக்க முடியும்? உண்மைதான்.

மண்ணோடு மண்ணாக மக்கள் செத்துச் சிதைந்து கொண்டிருக்கும்போது இதிகாசத்திலும் இலக்கியத்திலும் படம்லயித்துக் கிடக்கும் மனது வாய்க்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்தான்.

ச்சே…. பாழாய்ப்போன அந்தப் பெரியாருக்கு இது புரியாமல் போயிற்றே என்ன செய்ய?

அதுசரி….

ஒரே ஒரு கேள்வி :

நீரோ செத்துப் போனதாகச் சொன்னவன் எவன்?

நன்றி :  ”அந்திமழை” இதழ் (அக்டோபர் 2013)

http://andhimazhai.com/


சட்டத்தின் முன் அனைவரும் சமமில்லை….

$
0
0


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ

அதுவும் நன்றாகவே நடக்கும்.

                                                                                                                                                                                                – பகவத்கீதை.

முதலில்……

எந்தக் கஞ்சத்தனமும் இல்லாமல் மனதார….. வாயாரப் பாராட்டிவிடுவதே மிகவும் நேர்மையான செயலாக இருக்க முடியும். அதுவும் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவை. ஏழு கடல் தாண்டியும். ஏழு மலை தாண்டியும் தனது அதிகாரத்தின் நாவுகளை நீட்டிக் கொண்டிருக்கிற ஒரு பீடத்தின் ஆணி வேரையே அசைத்துக் காட்டியிருக்கிற முதல்வருக்கு வந்தனம் சொல்லி நம்ம கச்சேரியை ஆரம்பிப்பதே முறையானது.

எல்லாம்  முடிந்துவிட்டது. நவம்பர் 12 அதிகாலை சங்கரமடத்தின் பீடாதிபதி சங்கராச்சாரியாரின் கைது செய்தியைச் சுமந்தவாறேதான் விடிந்தது.

எந்தக் கற்பனைகளுக்கும் எல்லைகளுண்டு. ஈராக் மீதான போரில் அமெரிக்கா தோற்கும் என எண்ணியிருக்கலாம்….

டுவின் டவர்ஸ் தாக்குதலைப் போல வெள்ளை மாளிகையும் தரைமட்டமாவதைப் போல் கற்பனை செய்திருக்கலாம்….

ஆனால் முந்தைய இரவில் நடந்து முடிந்திருந்ததோ நமது கற்பனைக்கும் எட்டாத நிகழ்வு.

யார் நினைத்திருக்க முடியும்?

குடியரசுத் தலைவர்கள்…

பிரதமர்கள்….

தேர்தல் கமிஷ்னர்கள்….

பல உச்சநீதிமன்ற நீதிபதிகள்…sankaran_One

பல உயர் நீதிமன்ற நீதிபதிகள்….

மாநில முதல்வர்கள்….

என அனைவரும் வந்து “அருள்வாக்கு” பெற்றுச் செல்லும் மடத்திற்கு அப்படியொரு “ஆப்பு” வைப்பார் முதல்வர் என்று.

யார்தான் நினைத்திருக்க முடியும்?

அதைவிட ஆச்சர்யம் கலைஞர் முதன்முறையாக எந்த ஒரு….”இருந்தாலும்….” போடாமல் நேரடியாக  பாராட்டி இருப்பது.

(அப்படி எல்லாம் நாம் எழுதிவிட முடியுமா என்ன? இந்த இதழ் அச்சுக்குப் போகிற வேளையில் கலைஞர் பேட்டி அளித்திருக்கிறார்… “சுருதி மாற்றம்” தெரிகிறது அதில்.)

சங்கராச்சாரியாரை ஏற்றி வந்த வாகனம் காஞ்சி மண்ணைத் தொட்டவுடன் காவல்துறையைப் பாராட்டி அதிர்வேட்டுகளும், தாரை தப்பட்டைகளும் ஒலிக்க ஆரம்பிக்க….. நடப்பது கனவா நனவா என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டது பொதுசனம்.

ஏன் கைது?

எப்படிக் கைது?

எந்த நிலையில் கைது? என்பது குறித்தெல்லாம் அலசிக் கொண்டிருக்கின்றன “புலனாய்வு” வார இதழ்கள். தமிழகத்தின் ஆளும் கட்சி…. எதிர் கட்சிகள் என சகலரும் ஒரே அணியில் திரண்டு நின்ற காட்சி இதன் முன்னர் யுத்த காலத்தில் கூட கண்டிராத காட்சி.

அ.தி.மு.க.,   தி.மு.க.,   ம.தி.மு.க.,   பா.ம.க.,   காங்கிரஸ்.,   வலது கம்யூனிஸ்ட்., விடுதலைச் சிறுத்தைகள்., மார்க்சீய லெனினிய அமைப்புகள் என சகலரும் சங்கராச்சாரி கைது நடவடிக்கையை வரவேற்றுக் கொண்டிருந்த வேளையில் சில வட இந்தியத் தலைவர்கள் மட்டும் “ஒரு இந்து மதத் தலைவரை இப்படிக் கைது செய்வதா?” என முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.

இங்குள்ள பத்திரிகைகளோ சங்கராச்சாரியாரை இந்துக்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாகவே பிரதிபலிக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தன. சங்கராச்சாரியார்தான் இந்துக்களின் தலைவர் என்றால்… பங்காரு அடிகளார் என்ன இஸ்லாமியர்களின் தலைவரா? மற்ற மடாதிபதிகள் என்ன பெளத்தர்களது தலைவர்களா? உண்மையை ஒளிக்காது சொன்னால்….

காஞ்சி சங்கராச்சாரியார் இந்து மதத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும்தான் தலைவர்.

இதுதான் யதார்த்தமான உண்மை.

அதிலும் ஜீயர்களோ…. ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்களுக்குள் காஞ்சி சங்கர மடம் கிடையவே கிடையாது என அடித்துச் சத்தியம் செய்து வருகிறார்கள் இன்றைக்கும்.

“மேற்கே    -    துவாரகா

கிழக்கே    -    பூரி ஜெகந்நாதம்

வடக்கே    –      பத்ரிநாத்

தெற்கே     –   சிருங்கேரி

இவை நான்கைத்தான் ஆதிசங்கரர் நிறுவினார். இதில் காஞ்சி மடம் சேரவே சேராது” என்று இன்றும் குரல் கொடுத்துக் கொண்டிருக்க்கிறார்கள். இதனைத் திராவிடர் கழகமோ…. பெரியார் திராவிடர் கழகமோ சொன்னால் “நாஸ்திகர்கள் நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறார்கள்” என்று ஒதுக்கித் தள்ளலாம். ஆனால் சொல்பவர்கள் “அனைத்திந்திய பகவத்பாத சிஷ்யர்கள் சபை”. அவர்கள் அலசி ஆராய்ந்து வெளியிட்டுள்ள நூலின் பெயர்தான் : “தக்ஷ்ணாம்நாய பீடம் சிருங்கேரியா? காஞ்சியா?” என்பது.

சரி… எந்த மடம் ஒரிஜினல்….? அல்லது டூப்ளீகேட் என்பதெல்லாம் நமது பிரச்சனைகளன்று. ஆனால்…. ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டது அறிந்தவுடன் தமிழக மக்கள் ஏன் பொங்கி எழவில்லை?  சாலை மறியல்களிலும், கடையடைப்புகளிலும் தன்னிச்சையாகக் களத்தில் குதிக்கவில்லை?  அறித்த “பாரத் பந்த்”துக்கு தமிழகத்தின் ஒரு குக் கிராமம் கூட செவி சாய்க்கவில்லையே ஏன்?

ஏதேனும் அரசியல் கட்சித்தலைவர் கைது செய்யப்பட்டால்கூட பல்வேறு விதங்களில் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிற மக்கள்திரள் மெளனமாக இருந்ததற்கு என்ன அர்த்தம்?

ஆனால் மக்களது மெளனத்திற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.

அது : மடம் மக்களை எப்படிப் பார்த்ததோ மக்களும் அப்படியே மடத்தைப் பார்த்தனர் என்பதுதான்.

காஞ்சி சங்கராச்சாரி அரசியலில் மட்டும் மூக்கை நுழைத்து எரிச்சலைக் கொட்டிக் கொள்ளவில்லை….. தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆன்மீகத்திலும் மூக்கை நுழைத்து பக்தர்களது எரிச்சலுக்கு ஆளானார் என்பதுதான் உண்மை.

பழனியில் மூலவரின் சிலையை மறைத்தபடி பஞ்சலோக விக்ரகத்தை வைத்தது பக்தர்களது பெரும் எதிர்ப்பைக் கிளப்பியதோடு பல்வேறு போராட்டங்களுக்கும்  இட்டுச் சென்றது. திருப்பதி கோயிலின் உள்விவகாரங்களில் Kanchi-shankaracharyaமூக்கை நுழைத்தது வைணவர்களது கோபத்திற்கும் கண்டனத்திற்கும் கொண்டு சென்றது…… கரூர் போன்ற ஊர்களில் தமிழ் குடமுழுக்குக்கு முட்டுக்கட்டைகள் போட்டது….. தமிழ் பேசும் மக்களில் ஒரு பிரிவினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

போதாக்குறைக்கு…. “சுத்தமே இல்லாம….. கூட்டம் கூட்டமா கோயிலுக்குள்ளே வர்றா…..” என்று ‘அருள்வாக்கை’  ‘அருளியது’ உழைக்கின்ற எண்ணற்ற பிற்படுத்தப்பட்டோரையும், தலித்துகளையும் கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு  சென்றது.   வேலைக்குப்   போகும்    பெண்கள்    குறித்த        இந்த (ஆ) சாமியின் ”கண்டுபிடிப்பும்”…..  விதவைகள் குறித்த “திருவாசகங்களும்”…… பெண்களைக் காறிஉமிழ வைத்தன.

இன்றைக்கு என்னடாவென்றால்….. நமது அம்பேத்கருக்குப் போட்டியாக இந்த மனிதரைக்(?) கொண்டுவந்து விடுவார்கள் போலிருக்கிறது.

“தீண்டாமை ஒழிப்புக்குப் பாடுபட்டார்….”

“சாதி ஒழிப்புக்குச் சண்டை போட்டார்….”

என்றெல்லாம் ஒருசிலர் உளறுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

“இம்மாமனிதரை” 1987 இல் தலைக்காவிரியில் “கண்டுபிடித்து” மீட்டு வந்த போதும் இதே கதையைத்தான் அளந்தன ஒரு சில பத்திரிகைகள் என்பதுதான் நாம் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். அவர்களது கட்டுக்கதைகளின்படி பார்த்தால்….. “தீண்டாமை ஒழிப்புப் பணி”யில் அன்றைக்கு ஜெயேந்திரர் ஈடுபட்டது பெரியவர் சந்திரசேகரேந்திரருக்கு எதிராக.

இவை எல்லாவற்றையும் தாண்டி இன்று அனைவர் முன்பும் எழுந்திருக்கின்ற ஒரே கேள்வி :

சட்டத்தின் முன் அனைவரும் சமமா?  சமமில்லையா? என்பதுதான்.

சட்டத்தின்  முன் அனைவரும் சமம்தான் என்று நீங்களும் நானும் கரடியாய்க் கத்தி என்ன பயன்? ஜேயேந்திரரின் குருநாதர் சந்திரசேகரேந்திரர் அப்படிச் சொல்ல வேண்டுமே….?

ராஜாவுக்கு பிராம்மணனைத் தண்டிக்க மட்டும் அதிக ஜூரிக்ஸ்டிக்ஸன் கொடுக்கப்படவில்லை…. பிராம்மணனுக்கு  தரும் தண்டனை கடுமை குறைவாகவே இருக்கும்.  இதைப் பார்க்கிறபோது  Equlity before Law           சட்டத்திற்கு முன் சமத்துவம் இல்லாமல்….. சலுகையே தரக்கூடாத ஒரு வியத்தில் சலுகை தந்து அநியாயம் செய்திருப்பதாகத் தோன்றலாம்.

ஆனாலும் இதன் காரணத்தைப் புரிந்து கொண்டால் இதிலே அநியாய பக்க்ஷாதாபமில்லை என்று Sankaran_perusuதெரியும்.

குற்றவாளிக்கு ராஜதண்டனையே பிராயச்சித்தகர்மா என்றேன். பிராமணன் வேத மந்திர ரக்ஷணையையே வாழ்க்கையாகக் கொண்டவன். ஒரு நாள் கூட அவனை விட்டு இந்த வாழ்க்கை ஆச்சாரம் போகப்பிடாது. அப்படிப் போனால் அது தேச ஷேமத்துக்குக் கெடுதல். ஜெயிலில் போட்டால் அவன் எப்படி தன் ஆச்சாரங்களுக்குப் பங்கமில்லாமல் மந்திர ரக்க்ஷணை பண்ண முடியும்? அல்லது கண்ணை வாங்கி…. காலை வாங்கி அவனை தண்டித்தால் அப்போதும் அவனால் ஆகிற வேதரக்ஷ்ணம் அல்லவா கெட்டுப் போகும்? வேத தர்மம் இருக்க வேண்டும் என்பதற்குத்தான் ராஜாங்கம் இருப்பதே…..” என்கிறார் “மகா பெரியவர்” தனது ‘தெய்வத்தின் குரல்’ நூலின் மூன்றாம் பகுதியில்.

ஆக…. மற்றவர்கள் தவறு செய்தால் இ.பி.கோ. படி  “உள்ளே” போக வேண்டியது.

ப்ப்ப்ப்ப்ப்ராமணன் தவறு செய்தால் மனு தர்மத்தின் 379 சுலோகப்படி தலை மயிரில் கொஞ்சம் சிரைத்து விட்டுவிட்டால் (முண்டனம்) போதுமானது.

மொத்தத்தில் ஒரு தரப்புக்கு சிகைச்சேதம்.

இன்னொரு தரப்புக்கோ சிரச்சேதம்.

இத்தகைய சமூக இழிவுகளுக்கெல்லாம் எதிராகக் கிளர்ந்து எழுந்தவர்கள்தாம் சித்தர்கள்…… ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என மனித குலத்துக்காக தங்களை உருக்கிக் கொண்ட வள்ளலார்கள்.

மனு தர்மமா?  மனித தர்மமா? என்கிற கேள்வி மேலெழும் வேளையிலெல்லாம் தமிழ் மக்கள் மனித தர்மத்தையே உயர்த்திப் பிடிப்பார்கள் என்பதற்கு கண்முன்னே கண்ட சாட்சிதான் ஜெயேந்திரர் கைதுக்கு அவர்கள் காட்டிய மெளனம்.

தமிழக முதல்வரது கைது நடவடிக்கையின் மூலம் விழுந்திருக்கும் அடி மனுதர்ம எண்ணத்தின் மேல் விழுந்த அடி.

சிறையில் முதல் வகுப்புக் கொடுங்கோ….”

 

பூஜை புனஸ்காரங்களுக்குப் புஷ்பங்கள் கொடுங்கோ

 

ராகுகாலம் முடிந்து தீர்ப்புக் கொடுங்கோ…..”

என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர் கோரிக்கை மேல் கோரிக்கையாக வைத்துக் கொண்டே போவதைப் பார்க்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது….

எங்கே நாளைக்கு குற்றப்பத்திரிக்கையையும் “சமஸ்கிருதத்தில் கொடுங்கோ….” என்று சொல்லிவிடுவாரோ என்று.

வாழ்க  “ஜனநாயகம்”.

(நன்றி : புதிய பார்வை 1-12-2004)


எழுத்தாளன் சர்வரோக நிவாரணி அல்ல….

$
0
0

chess

எண்பதுகளின் மத்தியப்பகுதி அது.

இன்றைக்கு பிரான்சிலிருக்கும் கி.பி.அரவிந்தன்தான் அப்படிக் கேட்டவர்…. “அதென்ன தோழர் உங்கட நாட்டுல யாரைப் பார்த்தாலும் முதல் சந்திப்பிலேயே நீங்க மாஸ்கோ பக்கமா? இல்லை பீஜிங் பக்கமா? என்று கேட்கிறார்கள்? (அதுவாகப்பட்ட்து…. நீங்கள் சீனாவின் அரசியல் நிலைப்பாடுகளை ஆதரிக்கிறீர்களா? அல்லது சோவியத் யூனியனின் அரசியல் நிலைப்பாடுகளை ஆதரிக்கிறீர்களா? என்று அர்த்தம். ஓகே வா?) முதல் சந்திப்பிலேயே முரண்பாட்டில் துவங்கும் ஒரு உறவு எப்படி நிலைத்து நிற்கும்? ”எனக்கு உங்களுடைய இந்திந்த விஷயங்களில் ஒப்புதல் உண்டு…. எனக்கு உங்களிடம் பிடித்த விஷயமே இதுதான்…” என்று உடன்பாடானவற்றில் துவங்கும் உறவு நீடித்து நிற்கும். எடுத்தவுடனேயே முரண்பாடானவற்றில் துவங்கும் உறவு எப்படி நிலைக்கும்?” அவரது அந்தக் கேள்விகளில் உள்ள நியாயம் புரிபடுவதற்கே எனக்கு பல ஆண்டுகள் பிடித்தது.

உண்மைதான்….. நாம் பல நேரங்களில் முரண்பாடுகளுடனேயே ஒரு உறவைத் துவக்குகிறோம்.

ஒரிரு மாதங்கள் முன்பு எமது தோழர் பாண்டியன் ஒரு கடிதம் எழுதியிருந்தார் எனக்கு. பாண்டியன் பேசினால் அவரது நாவில் தமிழ் விளையாடும். அதுவும் தெள்ளத் தெளிவான தூய தமிழ். கேட்பதற்கு உறுத்தலோ….. கேலி செய்வதற்கு மனமோ தோன்றாத நடை அவரது தமிழுக்கு. பாண்டியனது துணைவியாரும் தன் துணைக்குச் சளைத்தவரில்லை. விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்ட கூட்டுறவுத் துறையின் உயர் அதிகாரி பாண்டியன்.

அவரது கடிதம் சொன்ன சேதிகள் இதுதான் : ”ஏன் முன்பைப் போல நிறைய எழுதுவதில்லை…..?”

”உங்கள் அப்பாவைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைப் போல ஏன் அதன் பிறகு எழுதவில்லை?” இப்படிப் பல ஏன்?கள். அனைத்துமே மிக மிக அழகான நியாயமான கேள்விகள். ஆனால் அத்தகைய கடிதத்தை எழுதிய தோழர் பாண்டியன் கடிதம் முடித்த பிறகு ஒரு மாபெரும் தவறைச் செய்திருந்தார். அது கடித உறையில் “ரகசியம்” என்றும் “உரியவர் மட்டும் பிரிக்கவும்” எனப் பச்சை மையினால் அடிக்கோடிட்டு அனுப்பியிருந்தார். இதில் எதற்கு ரகசியம்? தான் நேசிக்கும் ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும்? அவரது எதிர்கால எழுத்தும் வாழ்வும் எப்படி இருக்க வேண்டும்? என செப்பனிடக் கூடிய வரிகள் ரகசியமானவையா என்ன? கடித உறையில் ரகசியம் எனப் போட்டது மட்டுமே அவரது பிழை.

ஆனால் எனக்கொரு பதில் இருந்தது….. அது : எழுத்தாளன் என்பவன் Coffee Maker Machine கிடையாது. பாதித்தபோது வருவதே எழுத்து. எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லும் கருத்து கந்தசாமியல்ல எழுத்தாளர். ஆனால் இங்கு பலபேர் பிரசவவலி பற்றிகூட எழுதுகிறார்கள். (அதுவுமாகப்பட்டது ஆண் எழுத்தாளர்கள்)

எனக்குத் தெரிந்து பல எழுத்தாளன்கள்…

“இது எனக்குத் தெரியாது”

”இது எனக்குப் புரிபடவில்லை”

“நான் அதைப் பற்றி இனித்தான் தெரிந்து கொள்ளவேண்டும்.”

“அட அப்படியா…. அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று பிறந்ததில் இருந்து உச்சரித்ததுகூட கிடையாது. என்னைப் பொறுத்தவரை எழுத்தாளர் ஒருபோதும் சர்வரோக நிவாரணி கிடையாது. அவர்கள் அறியாதது… புரியாதது…. தெரியாதது அநேகம் உண்டு. ஆனால் அது புரிந்தால் அரியாசணம் எங்கே பறிபோய் விடுமோ என்கிற அச்சம் அவ்வளவுதான்.

என்னைப் பொறுத்தவரை தோழர் பாண்டியனுக்கு சொல்ல நினைத்தது இதுதான். அதுவும் என் வரிகளல்ல…. நான் நேசிக்கும் கிழட்டுக் கவிஞன் விக்கிரமாதித்தனுடையது…..

கரையில் நின்று ஆற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்றுதான் தோன்றுகிறது இப்பொழுதெல்லாம்.

எழுதித் தீருமோ இந்த வாழ்வு.

இல்லை, எழுதுவதற்காகவா இந்த வாழ்வு?.”

ங்….

எப்பொழுதுமே நான் இப்படித்தான்…. எதைச் சொல்ல வந்தேனோ அதை விட்டுவிட்டு ஊர் மேயப் போய்விடும் புத்தி. முரண்பாடுகளில் தொடங்குவது அல்ல உறவு…. ஒப்புமைகளில் உருவாவதே உறவு….. என்பதில் தொடங்கியதுதானே இந்த உரையாடல்….. என்ன சரிதானே?

அதாவது முதல் சந்திப்பே முரண்பாடோடு துவங்கக்கூடாது என்பதே இதன் சாரம். அதற்காக ராஜபக்‌ஷேவைப் பார்த்தவுடன் எனக்கும் உங்களுக்கும் இதில் இதிலெல்லாம் ஒப்புமை உண்டு…. என்றா துவங்க முடியும்? ஆக முரண்களிலும் இரண்டுவகை. ஒன்று நட்பு முரண். மற்றொன்று பகை முரண். இங்கு நாம் கதைத்துக் கொண்டிருப்பதெல்லாம் நட்புமுரண் குறித்தே. நமது உறவுகளில் நூற்றுக்கு நூறு சதவீதம் ஒன்றுபடக்கூடிய உறவு என்று எதுவுமேயில்லை என்பதுதான் எதார்த்தம்.

பல திருமண வீடுகளில் மணமக்களை வாழ்த்துகிறோம் என்கிற பெயரில் பாடாய்ப்படுத்தி விடுகின்றனர் பலர். ”மணமக்கள் நிலவும் வானும் போல…. நகமும் சதையும் போல…. ஜாடியும் மூடியும் போல….. லேடியும் பாடியும் போல…. எந்த முரண்பாடும் இல்லாமல் நூறாண்டு வாழ்ந்து….. “ என்கிற ரீதியில் போகும் அவர்களது வழக்கமான வாழ்த்து. அதெப்படி ஏறக்குறைய இருபது முப்பது ஆண்டுகள் வெவ்வேறு திசைகளில் வளர்ந்த வாழ்ந்த இருவர் மாற்றுக் கருத்துக்களேயின்றி பூவோடு நாராய் இருத்தல்  சாத்தியம்?

துணைவன் அகிரா குரோசுவாவை சிலாகிப்பவனாக இருந்து துணைவி மணிரத்னத்தின் கடலைக் கொண்டாடுபவளாக இருந்தால் என்னவாகும் நிலைமை?

எனக்குத் தெரிந்த தோழி ஒருவர் இறை நம்பிக்கையே அற்றவர். வாய்த்த கணவரோ கோயில் குளங்களையே கட்டிக் கொண்டு குடும்பம் நடத்துபவர். கடைசியில் முரண்பாடு முற்றி கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டுக்கே போய் விட்டார்.

என் தோழியல்ல…..

தோழியின் கணவர்.

நீயாவது கொஞ்சம் அனுசரித்துத் தொலையலாமல்லவா என்று தோழியைக் கேட்டால்…. ”அய்யோ…. கோயிலுக்குள் நுழைஞ்சாலே ஏதோ பொம்மைக் கடைக்குள்ள புகுந்தமாதிரி சிரிப்பு சிரிப்பா வருது” என்கிறாள் அவள். கடைசியில் “தெய்வ விசுவாசமற்ற பெண்குட்டியோடு யான் ஜீவிக்கில்லா….” என்று தாய் வீடு போன கணவனை அழைத்து வந்து…. உனக்குப் புடிச்சத நீ கும்பிடு… அவளை கும்பிடச் சொல்லி வற்புறுத்தாதே…. அதைப் போல நீ கும்பிடாட்டி பரவாயில்லை அவனைக் கிண்டல் பண்ணி கலாய்க்காதே…. என்று சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகி கை குலுக்க வைத்தார்கள். இப்போது தோழி இரண்டாம் முறை கர்ப்பமாம்.

குடும்பம் என்றில்லை கலை இலக்கிய அரசியல் தளங்களிலும் இத்தகைய முரண்கள் ஓரிரண்டு இருக்கத்தான் செய்யும். எனக்கு தமிழ்த் தேசியத்தில் சில போதாமைகள் இருப்பது போலவே நான் நம்பும் திராவிடக் கருத்தியல்களில் ஓரிரு பற்றாக்குறைகள் தென்படத்தான் செய்யும். இருவருக்குமே நோக்கம் சமூக மாற்றம்தான் என்கிற அடிப்படை உண்மை புரிந்தால் வெறுப்பும் வன்மமும் அற்ற ஆரோக்கியமான அரசியல் அங்கு ஆரம்பமாகும். மாற்றுக் கருத்து வைத்திருப்பவர்களை எதிரியாகப் பார்க்காத மனம்தான் அதற்கான அடித்தளமே.

அதற்கு நம் மீதான விமர்சனங்கள் எட்டக் கூடிய இடத்தில் நாம் இருக்க வேண்டும். அத்தகைய ஜனநாயக வெளியில்தான் மாற்றங்கள் மலரும். என்றைக்கு நம் மீதான விமர்சனங்கள் நம்மை எட்டாமல் போகிற தொலைவுக்குப் போய் விட்டோமோ அன்றைக்கே நாம் ஆரோக்கியமான வளர்ச்சியை இழந்துவிட்டோம் என்று அர்த்தம்.

ஆக….

அம்மா-மகன் உறவுக்குள்ளேயே நூற்றுக்கு நூறு உடன்பாடு இல்லா உலகில் சந்திக்கும் ஒவ்வொருவரோடும் சகலத்திலும் ஒப்புமையை எதிர்நோக்குவது எதார்த்தத்திற்குப் புறம்பான ஒன்று.

இங்கு கற்றுக்கொள்ள வேண்டிய முதற்பாடமே ஒற்றுமை குறித்தல்ல…….

முரணோடு வாழப்பழகுதல் குறித்தே.

அதுசரி…….

முரண்பாடு கூடாது என்பதில் ஆரம்பித்து….

முரண்பாடோடு வாழப்பழகுதலே முக்கியம் என முடிக்கிறேனே இதுவே பெரும் முரண்பாடாகப் படவில்லை உங்களுக்கு?

 

content-writer11

(நன்றி : “அந்திமழை” மாத இதழ்)


என்றாவது எழுதக்கூடும்……

$
0
0

 

”தம்பி…. நாளைக்குள்ள கட்டுரை அனுப்பலேன்னா…. மொன்னக்கத்தி எடுத்து உன்னைக் குத்தீருவேன்….. நீ எப்ப கட்டுரை அனுப்பற?” என்றார் அக்கா தமிழ்ச்செல்வி அலைபேசியில்.

இதுதான் தமிழ்ச்செல்வி….

இதுதான் அவரது துணைவர் கருணா மனோகரன்….

மனதில் பட்டதை பட்டவாறே பேசும் பாங்கு.

அவர் ”கட்டுரை” கேட்டது எந்தவொரு வார அல்லது மாத இதழுக்கோ அல்ல. நம் அனைவரிடம் இருந்தும் பயணப்பட்டுவிட்ட அவரது துணைவர் தோழர் கருணா மனோகரனின் நினைவு மலருக்கு. இப்படி உரிமையோடு கேட்கும் பாசம் வேறு எவருக்கு வரும்?

துள்ளித் திரிய வேண்டிய இளமைப் பருவத்தில் சமூக அநீதிகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்து வீட்டை விட்டு Karunaவீதிக்கு வந்தவர் தோழர் கருணா மனோகரன். சாதி மதங்களுக்கெதிராக குரல் கொடுத்ததோடு நிற்கவில்லை. நடைமுறையில் நடத்தியும் காட்டினார்….. தோழி தமிழ்ச்செல்வியைக் கரம் கோர்த்ததன் மூலம்.

நாட்கள் நகர்ந்தாலும் என்னால் எழுதமுடியவில்லை.

அதற்கொரு காரணம் இருந்தது….

அதை அக்காவிடம் சொல்லவில்லை.

ஆனால்…..  சொல்லியாக வேண்டிய வேளை வந்துவிட்டது. இல்லாவிட்டால் எனது மெளனம் மமதையாக மொழிபெயர்க்கப்பட்டு விடும்.

கடந்துவிட்ட இரு வருடங்களும் அத்தனை உவப்பானதாக இருக்கவில்லை எம் நட்பு வட்டத்துக்கு. ஏழாம் மாதம் விடியல் சிவா சமூக நோய்களுக்கு எதிராக போராடியதோடு உடல் நோயோடும் போராடி பயணப்பட்டார். மாவோ…. சேகுவேரா…. ஈழம் என சமூக மாற்றத்திற்கான எண்ணற்ற நூல்களை வெளிக்கொணர்ந்ததில் விடியல் சிவாவின் பங்கு மகத்தானது. அரசு மருத்துவமனையின் ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கபட்ட அவரது உடலை வாகனம் சுமந்து செல்ல பார்த்தபடி நின்றிருந்தோம்.

“தோழர்…. நம்ம சிவாவுக்கு எப்ப இரங்கல் கூட்டம்? யார் ஏற்பாடு பண்றா….? முன்னாடியே சொல்லுங்க நான் வந்தர்றேன்” என்றார் சமூகத்தின் மீது மாளா காதல் கொண்டவரும் திரைப்படக் கலைஞருமான தோழர் மணிவண்ணன்.

”அவசியம் சொல்றேன் தோழர்” என்றேன்.

அவரைபற்றிய நினைவுகளை என்றாவது ஓர்நாள் எழுதக்கூடும்  நான்.

அதோடு நிற்குமா?

சிவாவைப் போலவே தோழர் கருணா மனோகரனும் நோயோடு போராடி இறுதியில் வாழ்க்கைத் துண்டை உதறிப்போட்டு விட்டு பயணப்பட்டார் 2012 டிசம்பரில்.

பார்க்கும் போதும்….. அலைபேசியில் பேசும்போதும் தமிழ்ச்செல்வி அக்கா….” உங்க அண்ணனுக்கு நினைவு மலர்  கொண்டு வர்றோம்…. நம்ம மணிவண்ணன் கிட்ட பேசி ஒரு கட்டுரை ஒண்ணு அனுப்பச் சொல்லு தம்பி” என்பார்.

“அவசியம் பேசறேன்க்கா” என்பேன்.

இடையில் இரண்டாயிரம் தொடங்கி எம்மோடே சுற்றிச் சுழன்ற தோழன் சன் டிவி அவினாசிலிங்கத்திற்கு திடீரென ஒரு கோளாறு. உடலில் ரத்தம் உறையும் நேரத்தில் ஏதோ குறைபாடு. கோவையில் உள்ள மருத்துவனையில் அளித்த சிகிச்சை போதாதென்று சென்னைக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. தோழன் அவினாசிலிங்கத்தை சென்னை அனுப்பும் வேளையில்  மணிவண்ணனிடமிருந்து அலைபேசி அழைப்பு….  அவினாசிலிங்கம் நிலை குறித்து விசாரிக்கிறார் போனில். இருங்க அவினாசிகிட்டயே தர்றேன் என கொடுக்கிறேன் போனை. “தைரியமா சென்னை வந்து சேருங்க அவினாசி…. இனி நம்ம வீட்ல இருந்து சாப்பாடு வந்துரும்…. பணத்தப் பத்தி கவலப்படாதீங்க….” என்று ஆறுதல் அளிக்கிறார் அலைபேசியில்.

இது செவ்வாய் மாலை.

இடையில் நகர்ந்தது மூன்றே மூன்று நாட்கள்….

சனிக்கிழமை காலை அலைபேசியில் ஜோதியின் அழுகை…. “அப்பா போயிட்டாரு அங்கிள்…” என.

உடைந்து அழுதது எமது வட்டம். ஓடு சென்னைக்கு. ஓடினோம். மணிவண்ணனின் துணைவி செங்கமலம் அக்காவிற்கு அழக்கூட தெம்பில்லை. ”காலைல பல்லு வெளக்குறாரோ இல்லியோ உங்குளுக்குப் போன் Mani&Akkaபோடாம இருக்கமாட்டாரே  தம்பி….” எனத் தேம்புகிறார். நான்கைந்து நாட்களாகியும் சென்னையை விட்டு வரவே மனமில்லை. மருத்துவமனையில் உள்ள தோழன் அவினாசிலிங்கத்தை மீண்டும் பார்த்து கலாய்ப்பாகப்  பேசிவிட்டு ஊர் திரும்புகிறோம் நாங்கள்

நேரிலும் போனிலும் பேசியவர்கள் “நம்ம மணிவண்ணனுக்கு ஒரு இரங்கல் கூட்டம் போடலாம்…. அப்படியே மலர் ஒண்ணும்கொண்டு வரணும்.” என்றார்கள்.

“கட்டாயம் பண்ணீர்லாம் தோழர்” என்றேன்.

அவரைபற்றிய நினைவுகளை என்றாவது ஓர்நாள் எழுதக்கூடும்  நான்.

வாழ்க்கை அவ்வளவு கருணை உள்ளதா என்ன?

ஓடியது இடையில் ஏழெட்டு நாட்கள்தான்….. சென்னையில் இருந்து தகவல்…. அவினாசியைக் காப்பாற்ற முடியாது….. அநேகமாக இன்று நாளையோ கொண்டு வந்துவிடுவார்கள். சொன்னபடியே செய்தார்கள். நேர்மைத் திமிர் கொண்ட எம் நண்பனை கச்சிதமாக Pack செய்து கொண்டுவந்தார்கள் மறுநாள். அவனது பத்து வயது மகன் சொற்கோவின் முகத்தைப் பார்க்கக்கூட திராணியில்லை யாருக்கும். குழந்தைக்கு தமிழ்ப்பேர் வையுங்க…. தமிழ்ப்பேர் வையுங்க…. என்று கழுதையாய்க் கத்தியிருக்கிறேன் ஊர் முழுக்க. மத…. புராண பெயர்களையே தாண்டி வராதவர்களுக்கு தமிழ்ப்பெயர்….. தமிழுக்கு வந்துவிட்டவர்களுக்கு சர்வதேசப் போராளிகளது பெயர்…. இது என் வழமையான பார்முலா.

ஆனால் ஊரில் எவன் மதித்தான் என்னை?  என் மாமன் மகனுக்கு பகத்சிங் எனப் பெயரிட்டால்….. அவர் போய் பாலாஜி என வைத்துவிட்டு வருவார்.

பால்யகால தோழியின் மகனுக்கு சொற்கோ எனப் பெயரிட்டால் அவரது கணவர் ஹர்ஷவர்த்தனன் என ஆக்குவார்.

மாமனாவது மச்சானாவது ஒரு மயிரானும் என் பேச்சைக் கேட்டதில்லை. ஆனால் கேட்ட ஒரே………

1010753_3309194185626_673158561_nசாரி இரு ஆத்மாக்கள் என் அவினாசியும் அவனை வழிநடத்திய துணைவி கிருபாவும்தான். என் பேச்சையும் கேட்டு சொற்கோ எனப் பெயரிட்டவர்கள் அவர்கள்தான்.

இதுவும் இன்னபிறவும் மனதில் சுழல  எரியூட்டிவிட்டு வந்தோம் தோழனை.

நான்கைந்து நாட்கள் கழித்து சன் டிவியில் இருந்து குருசாமி போன் பண்ணினார். “அண்ணே நம்ம அவினாசிக்கு ஒரு மலர் போடலாம்ன்னு ஒரு யோசனை…. நீங்களும் ஒரு கட்டுரை….”

அவசியம் எழுதீர்றேன் தோழர் என்றேன் குருவிடம்

அவனைப்பற்றிய நினைவுகளை என்றாவது ஓர்நாள் எழுதக்கூடும்  நான்.

அப்படியெல்லாம் இரண்டொரு மாதம் நிம்மதியாகக் கழித்துவிட முடியுமா எம்மால்….?

ஒரு காலைப் பொழுதில் வீணை மைந்தனிடமிருந்து அழைப்பு….. “அம்மா போயிட்டாங்க தலைவா….” அவன் அம்மா என்றது தோழர் மணிவண்ணனின் துணைவியார் செங்கமலத்தை. மணிவண்ணன் “போய்ச் சேர்ந்த” அறுபதாவது நாள் அக்கா செங்கமலமும் தன் மூச்சை நிறுத்திக் கொள்ள….. மீண்டும் ஓட்டம் சென்னைக்கு. போனபோதெல்லாம் பறிமாறிய கரங்கள் மடித்து வைக்கப்பட்டு ஐஸ்பெட்டிக்குள் அக்கா செங்கமலம். தோழன் மணிவண்ணனின் தங்கைகள் மேகலாவும்,பூங்கோதையும் கரம் பிடித்துக் கதற வார்த்தைகள் ஏதுமின்றி நின்றிருந்தேன். தலைவனை எரியூட்டிய அதே மயானத்தில் அக்காவையும் எரியூட்டிவிட்டு வீடு திரும்பினோம். மகன் ரகு பித்துப்பிடித்தவனைப்போல் செங்கமலம் அக்கா படத்தின் முன்பு அமர்ந்திருந்தான். வீட்டை விட்டு வெளியே வரும்போது மீண்டும் ஒரு முறை வீட்டைத் திரும்பிப் பார்த்தேன்…. அக்கா செங்கமலம் வாசல் வரை வந்து வழியனுப்பி வைக்காத முதல் நாள் அது.

அவரைப்பற்றிய நினைவுகளை என்றாவது ஓர்நாள் எழுதக்கூடும்  நான்.

கோவை திரும்பி இருபத்தி நாலு மணிநேரம் கூட தாண்டியிருக்காது. நண்பன் ராஜனிடம் இருந்து அழைப்பு. “யோவ் பெருசு போயிடுச்சு. வந்து சேரு” என்று. என்னை பக்கத்து வீட்டுக்காரருக்குக் கூட பரிச்சயமில்லாத பொழுதுகளில் சென்னை செல்லும்போதெல்லாம் ரயிலில் இருந்து இறங்கியது தொடங்கி சாப்பாட்டுப் பொட்டலம் வாங்கி ரயில் ஏற்றிவிடுவது வரை பார்த்துக் கொள்வார்கள் ராஜனும் இளங்கோவும். அப்படி பொத்திப் பொத்திப் பார்த்துக் கொண்ட ராஜன் ”பெருசு” என்று சொன்னது பெரியார்தாசனைத்தான்.

அட…. இதுவும் போச்சா…..? அப்புறம் என்ன……? மீண்டும் ரயில் சென்னைக்கு. அம்மா, வளவன், சுரதா… நண்பர்கள் சூழ்ந்திருக்க மெளனமாய் பெட்டிக்குள் ”பெருசு”.

மிகச் சரியாக 1985 ஜூலை 23 ஆம் தேதி எனக்கு அறிமுகமாகிறார் பெரியார்தாசன். ஈழப்போராளிகள்தான் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள். கோவையில் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த ஜூலைப் படுகொலைகள் நினைவு நிகழ்ச்சிக்கு அவரை அழைத்திருந்தோம்.

ஈழநேசனாய்….. பெரியார்தாசனாய்…. சித்தார்த்தாவாய்…. நல்மன பெரியார்தாசனாய்…. அப்துல்லாவாய்…… எனப்பல்வேறு பரிமாணங்களில் அவரைப் பார்த்திருக்கிறேன். அவரோடு உடன்பட்ட பொழுதுகளும் உண்டு…. periyardasanமுரண்பட்ட பொழுதுகளும் உண்டு. “யோவ் பாமரா!…. என்னை மொதொ மொதோ பாத்தப்ப உங்கம்மா குடுத்த பருப்பு சோறு இருக்கே…. அது அப்படியே கோந்து மாதிரி போயி ஒட்டிகிட்டு நான் பட்டபாடு இருக்கே…..” என்று என்றும் கலாய்க்கும் பெருசு. பெருசின் உடலை பொது மருத்துவமனைக்கு அளித்துவிட்டு வளவன் ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தான். பிசிறற்ற பேச்சு.

எல்லாம் முடிந்த பிற்பாடு வழக்கம்போல் ஊர் திரும்ப…. வழக்கம்போல ஒரு தொலைபேசி அழைப்பு. அவரது துணைவியார் வாசுகி பேசினார் மறுமுனையில்….. “நம்ம பேராசிரியருக்கு ஒரு நினைவு மலர் கொண்டு வரணும் பாமரன்….” கட்டாயம் கொண்டு வந்தர்லாம் தோழர்……. என்றேன்.

அவரைப்பற்றிய நினைவுகளை என்றாவது ஓர்நாள் எழுதக்கூடும்  நான்.

ஒரு மனிதன் தொடர்ச்சியாக எத்தனை இழப்புகளைத் தாங்க இயலும்.? சென்னைக்கும் கோவைக்கும் மாறி மாறி ஓடி….

மன உளைச்சலும்….. உடல் உளச்சலும் ஒன்று சேர தாக்க எட்டு கிலோ குறைந்திருந்தேன் நான். உறக்கமும் நிம்மதியுமற்ற பொழுதுகளால்….. கண்களும் கன்னங்களும் எனது கல்லூரிக் காலங்களில் இருந்ததைப் போல் ஒட்டிப் போய்…. “என்னாச்சு”” என என்னை விசாரிக்க ஆரம்பித்தனர் எல்லோரும்.

என் உடம்பைப் பார்த்தால் வெகுவிரைவில் எனக்கு இரங்கல் மலர் வெளியிட வேண்டி இருக்குமோ என எண்ண வைத்தது நண்பர்களை.

எதையும் எழுத முடியவில்லை என்னால்…..

எப்படி முடியும்?

தமிழ்ச்செல்வி அக்காவைப் போலவே பேராசிரியர் வாசுகிக்கும் என் மீது தாள முடியாத கோபம் இருக்கக்கூடும்….. அந்தக் கோபமும் மாறாத அன்பின் வெளிப்பாடுதான் என்பதை அறிவேன் நான்.

நீங்கள் சொல்லுங்கள் நண்பர்களே தொடர்ந்து துரத்தும் இழப்புகளுக்கு மத்தியில் எழுதுவது எப்படி? எண்பத்தி நாலில் ”பயணித்த” என் அப்பாவைப் பற்றி தொண்ணூற்றி ஆறில்தான் எழுத முடிந்தது. தகப்பன் போன பிறகு இன்னொரு தகப்பனாய் வந்து சேர்ந்து என்னை செப்பனிட்ட பூவுலகின் நண்பன் தோழன் நெடுஞ்செழியனைப் பற்றி இன்னும் ஓரெழுத்துகூட எழுதவில்லை நான்.

இவர்கள் அனைவரையும் பற்றிய நினைவுகளை என்றாவது ஓர்நாள் எழுதக்கூடும்  நான்.

நன்றி : அந்திமழை – ஜனவரி – 2014


ஊர் கூடி இழுத்த தேர்….

$
0
0

 

மிக நீண்ட நெடிய காலத்திற்குப் பிற்பாடு ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டிருக்கிறது மனித உரிமை ஆர்வலர்கள் pazha nedumaranமத்தியில்.பிப்ரவரி 18 ல் வழங்கப்பட்ட உச்சநீதி மன்ற தீர்ப்பின் மூலம்.

மரணத்தின் நிழல் துரத்திக் கொண்டிருந்த மூவரும் தண்டனை குறைக்கப்பட்டு தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கிடைத்த முதல் கட்ட வெற்றி இது.

Kolathurமனித உரிமை வரலாற்றில்  இத்தீர்ப்பு ஒரு மைல் கல். சந்தேகமேயில்லை. ஆனால் கடக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது.

அளவிடற்கரிய கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் நாம் பொறுமையோடும் பொறுப்புணர்ச்சியோடும் நடந்து கொள்ள வேண்டிய வேளை இது. ஏறக்குறைய இருபத்தி                  மூன்றாண்டுகளுக்குப் பிற்பாடு தென்பட்டிருக்கிற இந்த நம்பிக்கை ஒளிக்கீற்று எப்படிச் சாத்தியமாயிற்று என்பதும்….

Seemanஇது யார் யாரால் எல்லாம் சாத்தியமாகி இருக்கிறது என்பதும்… கடந்த கால வரலாற்றை அசைபோட்டுப் பார்ப்பதும் அவசியம்தான். ஆனால்அந்த அலசலும் நமக்குள் நாமே ஏற்படுத்திக் கொள்கிற விரிசலாக அமைந்துவிடக் கூடாது என்பதுதான் அதிமுக்கியமானது.

 

அந்தக் காலகட்டத்தில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது எங்களுக்குத் தெரியாதா?…

 

இவர் அப்போது எங்கே vaiko-file-295போயிருந்தார் என்பது புரியாதா? என்று ஒருவர் மற்றவர் மீது புழுதி வாரித்

தூற்றாமல் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 
Arunaதொடர்ந்து வாசிக்க…..

http://andhimazhai.com/news/view/pamaran-10-03-2014.html


நம்முளுக்கு ஒரு சந்தேகம்….

$
0
0

Gujrathi

குஜராத்துல ஒரு பைப்பத் தொறந்தா பாலா கொட்டுதாம்….
இன்னொரு பைப்பத் தொறந்தா தேனா ஊத்துதாம்….

சுவிச்சப் போடாமயே லைட்டெல்லாம் எரியுதாம்….
பைப்பத் தொறக்காமயே தண்ணியா வழியுதாம்….

நம்முளுக்கு ஒரு சந்தேகம்….

அப்புறம் ஏம்ப்பா…..
இந்த குஜராத்திக லட்சம் லட்சமா இங்க வந்து குந்திகிட்டு இருக்காங்க?

நம்ம கூட இருந்து இப்புடிக் “கஷ்டப்படறதுக்கு” பதிலா பேசாம குஜராத்துக்கே பொட்டியக் கட்டலாமில்ல?

ஆனாலும் இந்தக் குஜராத்திகளுக்கு இவ்வளவு “பெருந்தன்மை” கூடாதப்பா…..


வாக்காளப் பெருங்குடி மக்களுக்கு….

$
0
0

 

 (பாகம் – 1)

நாலரை வருசமா ஊரை உட்டு ஓடிப் போயிருந்த நம்ம ஜ.நா.கா.ஜம்பு திரும்பி வந்திருக்கான்னு நம்ம ”மனித உரிமை” மார்த்தாண்டன் சொன்னதுமே கதி கலங்கிப் போச்சு…

இதென்னடாது வம்பாப் போச்சு.. ஏற்கனவே இந்த உள்ளூர்ப் பிச்சைக்காரனுக தொந்தரவு தாங்காம அல்லாடிக்கிட்டு இருக்குற இந்த நேரத்துல இனி இவன் தொந்தரவு தாங்க முடியாதேன்னு கிலி கெளம்பீடுச்சு.

தேர்தல் தேதி அறிவிக்கிறது நம்ம தேர்தல் கமிசனுக்கே தெரியுமோ தெரியாதோ… ஆனா… நம்ம ஜ.நா.கா. ஜம்புவுக்கு மட்டும் எப்புடியோ மூக்குல வேர்த்துரும். நாலரை வருசமா ஊர் மேய்ஞ்சுகிட்டு இருந்தவனுக்கு திடீர்னு சனநாயகக் கடமை உணர்வு தாறுமாறாக் கெளம்பீரும். அழுகி நாறிக் கெடக்கற சன நாயகத்தை நாமதான் சுத்தம் பண்ணோனும்னு பொலம்ப ஆரம்பிச்சுடுவான். அதோட நிக்காம ஊருக்குள்ள அனாமத்தா சுத்துறவனுகளயெல்லாம் அள்ளிக்கிட்டு போயி எந்தக் கருமத்துக்காவது ஓட்டுப் போட வெச்சுட்டுதான் அடங்குவான். இவனோட இந்த ஜனநாயக ஒப்பாரி தாங்க முடியாமத்தான்… ஜம்புலிங்கம்கிற அவனோட பேரே ”ஜனநாயக காவலன்” ஜம்புவா ஆகிப்போச்சு.  இவன இப்பப் பாத்தா சரிப்படாது… நாலஞ்சுநாள் கழிச்சு பார்ப்போம்னு சொல்லீட்டேன் நம்ம மார்த்தாண்டன் கிட்ட.

தெருவுல எங்கியும் நடமாட முடியலே. எப்ப எவன் கும்பிடுவான்….. எவன் கால்ல உளுவான்னு ஒரு எழவும்புரியல.

‘கடந்த ஐந்தாண்டுகளா இவன் என்ன கிழிச்சான்?ன்னு அவனும்…. அதுக்கு முன்னாடி இருந்த அஞ்சு வருசம் அவன் என்ன கிழிச்சா?ன்னு இவனும்….. மாத்தி மாத்தி அடிச்சுக்கிட்டதுல ‘இதுக எதுவும் எதையும் கிழிக்கல சட்டமன்றத்துல வேட்டியக் கிழிச்சதத் தவிர…’ன்னு அவனவன் பொழப்பப் பாக்க கெளம்பீட்டான்.

”புண்ணாக்கு!… இவுனுக பேசறதக் கேட்டுகிட்டு இருந்தா நம்ம பொழப்பும் நாறிடும். நம்ம ஊடு கொஞ்சம் ஒழுகுது.. நாலு தென்னை மட்டைய வெச்சு மேஞ்சர்லாம் வா…’ன்னு கூப்புட்டான் ”மனித உரிமை”.

சரி வர்றேன்… ஆனா தென்ன மட்டைக்கு என்ன பண்றது?…ன்னேன்.

”நம்ம ‘ஒடன் பொறப்பு’ சைக்கிள் கடை நடராஜ் தர்றேன்னான்…… அவனப் பாத்து வாங்கீட்டு வந்தர்லாம்….”ன்னான்.

மார்த்தாண்டனும் நானும் சைக்கிள் கடைக்கு போனா… கடைப் பையன்தான் இருக்கான். கேட்டா……

”அண்ணன் ஆபீசுக்குப் போயிருக்கார்னே”ங்கிறான் பையன்.

இதென்னடாது நம்மாளு அஞ்சாங் கிளாஸ்லயே ஆறு வருசம் படிச்சவனாச்சே… இவனெங்க ஆபீசுக்குப் போறதுன்னு யோசிச்சுக்கிட்டே…

”செரியாச் சொல்றா…. எந்த ஆபீசுக்கு…?”ன்னு கேட்க…

” கட்சி ஆபீசுக்குண்ணே…..”ங்கிறான் பையன்.

கட்சி ஆபீசுக்குள்ள நொழைஞ்சா…. ஏழெட்டு ‘ஒடன்பொறப்புக’ சூழ உக்கார்ந்திருந்தான்  நடராஜ்.

தலையப் பார்த்துமே ”ஓட்டர் லிஸ்ட்டுல பேர் இருக்கான்னு பாத்துட்டியா….?”ங்கிறான்.

”அதெல்லாம் இருக்கு… மொதல்ல உங்கிட்ட தென்னமட்டை இருக்கா.. அதச் சொல்லூ…”ன்னான்  ”மனித உரிமை”.

”எங்க பொற்கால ஆட்சில தென்னம்மட்டைக்கா பஞ்சம்? இது மட்டுமா?.. காலில்லாதவர்களுக்கு ஹை ஹீல்ஸ் ஷு… காதில்லாதவர்களுக்கு இலவச வாக்மேன்… கையே இல்லாதவர்களுக்கு நெயில் பாலிஷ்… இதையெல்லாம் வழங்கியது கழக அரசு……”ன்னு வழக்கம் போல ஆரம்பிச்சுட்டான் சைக்கிள் கடை நடராஜ்.

”யோவ்… அதெல்லாம் இருக்கட்டும்… ஊடு ஒழுகுது. இப்ப நீ தென்னம்மட்டை தருவியா இல்லையா.”

”பொறு… மார்த்தாண்டா பொறு… கோபப்படாதே….

சொன்னதைச் செய்வோம்…

செய்வதைச் சொல்வோம்… நீ மொதல்ல நம்முளுக்கு ஓட்டுப்போடுவியா…? அதச் சொல்லு”ங்கிறான் நடையன்.

”உனக்கும் இல்ல… எவனுக்கும் இல்ல. நீ ஆள உடு… மட்டை எப்பத் தருவ….?”ன்னான்.

அதுக்குள்ள எங்கியோ இருந்து பூந்த ஒரு ’ஒடன் பொறப்பு’…

“சார் கிட்ட இப்படியா பேசறது…..

சும்மா இருங்க நட்ராஜ்…

சார்…! யு சி அவர் சிம்பல் ஈஸ் ரைசிங் சன்… நீங்க படிச்சவங்க… இந்தக் கண்ட்ரீலயே  ஜனநாயகரீதியா ஒரு பார்ட்டி MK_Indira1_1474652_1474652gஇருக்குன்னா அது டி.எம்.கே.தான். கொள்கையைப் பொறுத்தவரை எப்பவுமே உறுதி. இதுக்கு மேல நீங்கதான் சார் டிசைட் பண்ணனும்…..”ன்னு பேசி முடிச்சுட்டு…

“இந்த மாதிரி ஆளுககிட்ட எல்லாம் அப்பப்ப இங்கிலீசுல பேசி கலக்குனாத்தான் ஓட்டுப் போடுவாங்க”ங்கிற மாதிரி பெருமிதத்தோட ஒரு பார்வை பார்த்தது அந்த ’ஒடன்பொறப்பு’.

இதக் கேட்டதும் கடுப்பாயிட்டான் மார்த்தாண்டன்.
“எதுய்யா கொள்கை…? எமர்ஜென்சில அப்பாவித் தொண்டனுகள உள்ள போட்டு நொக்கி நொங்கு தின்ன வெச்ச அதே இந்திரா காங்கிரசோட 1980-ல கூட்டு சேர்ந்து……

‘நேருவின் மகளே வருக…..! நிலையான ஆட்சி தருக…..!’ன்னு அந்தர் பல்டி அடிச்சீங்க. கட்சிக்குள்ள இருந்த வரைக்கும் வை.கோவப் ‘போர் வாள்’….ன்னீங்க. தனியா கூட்டஞ் சேத்துறாருனு புரிஞ்ச உடனே ‘ஒரே உறைக்குள்ள ரெண்டு பிச்சுவா இருக்க முடியாது…..’ன்னீங்க.

‘ஓராயிரம் அரவங்கள் ஒண்ணா தீண்டுன மாதிரி…..

ஈராயிரம் வண்டுகள் இடுப்பக் கடிச்ச மாதிரி..…ன்னு உங்கள மாதிரியே பேசிகிட்டிருந்த அந்த மனுசன ‘புலிக கூட சேர்ந்து கொல்லப் பாக்குறாரு’ன்னு அவுத்து உட்டீங்க….. உங்க ரெண்டு பேத்தோட நாடகமும் புரியாம உசுரை உட்டவங்களோட vaiko_karuசமாதீல நின்னு சாபம் உட்ட அதே வைகோ பின்னாடி… உங்க திமுக கூடவே கூட்டணி வெச்சு……”மகன் எப்படி குடித்தனம் நடத்தறான்கிறதப் பார்க்க வந்திருக்காரு……”ன்னு பெருமிதப் பட்டாரு.

அப்புறம் மறுபடியும் ‘ஒரே உறை ரெண்டு பிச்சுவா’ ஞாபகத்துக்கு வர…… அவரு மறுபடியும் ”ஸ்டாலின வாரிசாக்கறாங்க… மாவோவ மாப்பிள்ளையாக்குறாங்க…..”ன்னு பேச ஆரம்பிக்க…… நீங்களும் பழையபடி ”போர்வாள்
துருப்புடிச்சுருச்சு…… துரோகம் பண்ணுது…”ன்னு அள்ளி உட ஆரம்பிச்சுட்டீங்க.

போதாக்குறைக்கு……..

”பா.ஜ.க. என்பது ஒரு ஆக்டோபஸ். அதோட ஒரு முகம் ஆர்.எஸ்.எஸ். இன்னொரு முகம் பஜ்ரங்தள்’ன்னு விளாசித்தள்ளுனீங்க……

போன தேர்தலுக்கு முந்துன தேர்தல்ல… பி.ஜெ.பிக்கு தி.மு.க இந்து விரோதக் கட்சி- அ.தி.மு.க யோக்கிய கட்சி.

vaj_Karuஇந்த தேர்தல்ல தி.மு.க தோழமைக் கட்சி – அ.தி.மு.க. ஊழல் கட்சி.

நீங்க மட்டும் இந்தத் தடவ ‘பத்து சீட்டுதான் உங்களுக்கு’ன்னு சொல்லீருந்தா பழையபடி நீங்க இந்து விரோதக் கட்சியா ஆயிருப்பீங்க…

அப்புறம் என்னடான்னா…… ஊர் ஊருக்கு யாரு உங்க வேட்டியக் கிழிச்சாங்களோ அவுங்க கூடயே சேர்ந்து ‘தேசிய ஜனநாயக ஆக்டோபஸ் கூட்டணி’ அமைச்சிட்டீங்க… கொள்கையாம்… கொள்………” ன்னு சொல்லச் சொல்ல உளுந்துது ஒதை….

எவன் மிதிக்கிறான்…… எங்க மிதிக்கிறான்……. ஒரு எழவும் புரியல… கொஞ்ச தூரம் ஓடி வந்தப்பறந்தான் புரியுது நம்ம வேட்டிய ‘ஆக்டோபஸ் கூட்டணி’ ஆபீசுலயே உட்டுட்டு வந்தது.

எங்க திரும்புனாலும் பாக்கறவனெல்லாம் மொறைக்கற மாதிரியும்… ஒதைக்கற மாதிரியும்… ஒரே பீதி……

 

(இதன் அடுத்த அத்தியாயம் நாளை மறுநாள்…. )

 

நன்றி : குமுதம் வார இதழ் 11.5.2001.

 

(Boss….. இந்தக் கண்றாவி அரசியல் கட்டுரை எழுதி 13 வருசம் ஆச்சு. என்ன ஒரே வித்தியாசம் இங்கிட்டு இருந்தவங்க அங்கிட்டு இருக்காங்க…. அங்கிட்டு இருந்தவங்க இங்கிட்டு இருக்காங்க. சிலதுக மொதல்மொறையா அனாதையா நிக்குதுக…. அம்புட்டுதான். )



சும்மா இருங்க தோழரே….. இதெல்லாம் ஒரு ’யுத்த தந்திரம்’……..

$
0
0

 

(முந்தைய பதிவை காண….)

திடீர்னு ஒரு கை தோள் மேல விழுந்ததும் ‘அய்யோ நானில்லை…. எல்லாம் நம்ம மார்த்தாண்டன்தான்’…..ன்னு கத்தீட்டேன்.

”பயப்படாதீங்க தோழரே! யாரு கூட என்ன பேசறதுன்னு கெடையாதா…. இந்தத் ‘தந்தரோபாயம்’ எல்லாம் தெரியாம கண்டபக்கம் கண்டதெல்லாம் பேசக்கூடாது. வாங்க… உங்க மார்த்தாண்டனை எங்க ஆபீசுலதான் படுக்க வெச்சுருக்கோம்” ன்னாரு ’தோழரு’.

அய்யோ….. மறுபடியும் “ஆபீசா”…. நான் வரமாட்டேன்னு அலற….

“புரியாமப் பேசாதீங்க தோழரே….! இது அந்த ‘ஆபீசு’ மாதிரி இல்ல…. இது எங்களோட ‘மத சார்பற்ற கூட்டணி’ ஆபீசு…. CPI_JJவாங்க….”ன்னார்.

இதென்னடாது…. ஊருக்கெல்லாம் சகுனஞ் சொன்ன பல்லி கழுநீர்ப் பானைல உளுந்து உசுர உட்ட கதையாப் போச்சே நம்ம கதைன்னு நெனச்சுக்கிட்டே கூட நடந்தேன்.

‘ஆபீசுக்குள்ள’ நம்ம மார்த்தாண்டனுக்கு பிளாஸ்த்திரி போட்டு…. கைக்கு தொட்டல் கட்டி படுக்க வெச்சிருந்துச்சு. என்னப் பார்த்ததுமே எந்திரிச்சு ஏதோ பேச ஆரம்பிச்சான்.

“மனித உரிமை….! இப்ப நீ எதையும் பேச வேண்டாம். நீ பேசித்தான் இவ்வளவு சிக்கலும்….. எதுவானாலும் இனி நான் பேசிக்கிறேன்…. நீ சும்மா படு…ன்னுட்டு ‘கட்சி ஆபீச’ லேசா நோட்டம் உட்டேன்.

காரல் மார்க்சு….

லெனினு….

மாவோ….

சேகுவேரா….

ஜெயலலிதா….ன்னு எல்லாம் புரட்சித் தலைவர்களோட படங்க.

“அவுங்க கூட என்ன பிரச்சனை தோழரே…..? எதுனால உங்களப் போட்டு இப்படி அடிச்சிருக்காங்க…..?”ன்னு கேட்டாரு ‘தோழரு’.
ஓட்டுப்போட மாட்டோம்…..ன்னு சொன்னோம்…. அதான் இப்படி….ன்னு சொல்லச் சொல்ல……

“இது நியாயமா?” ன்னு ஒரு குரல்…..

திரும்பிப் பாத்தா எவனோ ஒரு கேமராவப் புடுச்சுகிட்டு நிக்கறான்.

“பயப்படாதீங்க தோழரே….. இவுரு நம்ம தோழமைக் கட்சியோட டீ.வீ.க்காரரு…. தெருவுல போற ஒருத்தன் தும்முனாக்கூட விடமாட்டாரு. அத அப்படியே லபுக்குன்னு படம் புடுச்சுட்டு வந்து ‘கருணாநிதியின் அராஜகம் பாரீர்’ன்னு அம்பலப்படுத்தீருவாரு.”

ஏனுங்க…. அப்ப….. மகாமகத்துல இருந்து மண்ணென்னை மகம் வரைக்கும் அந்த மகராசியால படாதபாடு பட்டமே அது jayalalitha_vajpayee_20110321.jpgமட்டும் நியாயமுங்களா….?ன்னு நான் பேசப் பேச….. பென்ச்சுல இருந்த நம்ம ‘மனித உரிமை’ எந்திருச்சு ஏதோ சைகை காட்டறான்…. அதெல்லாம் நமக்கு வெளங்குனாத்தானே….? நம்முளுக்குத்தான் நாக்குல நர்த்தனம் ஆடுதே சனி.

”ச்சு….ச்சு…. சும்மா இருங்க தோழரே….. இதெல்லாம் ஒரு ’யுத்த தந்திரம்’தான்…. அமைதி….. அமைதீ…..”ங்குறார் ‘தோழர். கேமரா வெச்சிருந்தவன் திரு திருன்னு முழிக்கிறான்.

“சரி…. அவுங்குளுக்கு ஓட்டுப் போட மாட்டோம்ன்னு சொன்னீங்க சரி…. அப்புறம் எப்ப உங்கள அடிச்சாங்க….? நீங்க ’மதசார்பற்ற கூட்டணிக்குத்தான் ஓட்டுப்போடுவோம்….’ன்னு சொன்ன பிறகா?”ன்னு கேட்டார் ’தோழர்’.

இதென்ன தோழரே புது வம்பு…..? நாங்க அவுங்குளுக்கும் இல்ல…. உங்குளுக்கும் இல்ல…… யாருக்கும் போடப் போறதில்லைன்னுதானே சொன்னோம்…..ன்னேன்.

அதக் கேட்டதும் தோழரோட முகமே மாறீடுச்சு.

‘இது நியாயமா?’ப் பார்ட்டி தலைல அடிச்சுக்கிட்டே… கேமராவ ஆப் பண்ணிட்டு போயி ஒரு ஓரமா உக்காந்துகிச்சு.

“யாருக்கும் போட மாட்டீங்க. சரி… அப்படீன்னா நீங்க ML ஆளுங்களா…?” ன்னு கேட்டாரு ‘தோழரு’.

அதெல்லாம படிக்கிறதுக்கு நம்முளுக்கு ஏதுங்க வசதி? நான் பி.எல்.லும் இல்ல… எம்.எல்.லும் இல்ல… வெறும் எட்டாங்கிளாஸ் பெயிலூ….ன்னேன்.

”யோவ்….! அதில்லையா… நான் கேட்டது…… நீங்க மார்க்ஸிட் லெனினிஸ்ட் கட்சிக்காரங்களா? அதாவது…. நீங்க
நக்சலைட்டா?ன்னு கேட்டேன்…”ன்னாரு.

நான் வெறும் டியூப்லைட்டுங்க தோழரே. நீங்க பேசற பெரிய பெரிய விசயமெல்லாம் எதுவும் தெரியாது… உங்கள மாதிரி போயஸ் அரண்மனைக்கும்….. கோபாலபுரத்துக்கும்…. மாறி மாறி காவடி எடுத்துட்டு ‘வர்க்கப்புரட்சி’……., ‘சொர்கப்புரட்சி’……ன்னெல்லாம் பேச நம்முளுக்கு வராது. ஐக்கிய முன்னணி ஆட்சியப்ப….. இதே லல்லு பிரசாத் மேல வெறும் குற்றச்சாட்டு வெச்சப்பவே நீங்க என்ன குதி குதிச்சீங்க…… இப்ப என்னடான்னா ஜெ. குற்றவாளீன்னு தனிக்கோர்ட்டுல நிரூபணமே ஆனப்புறமும் இப்படி மௌன விரதம் இருக்கீங்களே. இது நியாயமா…”ன்னேன்.

“தோழரே….! கொஞ்சம் அடக்கிப் பேசுங்க. மொதல்ல நாம பாக்க வேண்டீது ஊழலா? மதவாதமா?ன்னா… எங்களப் Jayalalitha,A.B.Bardhan,Prakash Karatபொறுத்த வரைக்கும் மதவாதம்தான்”ங்கிறாரு தோழரு.

 

அதாவது சுருக்கமாச் சொன்னா…..

கழுதை போடற விட்டைல

முன் விட்டை நல்லதா…….

இல்ல பின் விட்டை நல்லதா…… ங்கிற மாதிரி இருக்கு நீங்க பேசறது. சோத்துக்கே லாட்டரி அடிக்குற மக்களுக்கு இந்த ரெண்டுமே எமன்தான்……ன்னு சொல்லீட்டு பெருமிதமா மார்த்தாண்டனப் பாக்கறேன்……

பகீர்ன்னு ஆயிடுச்சு.

அவன் படுத்திருந்த பென்ச்சு காலியாக் கெடக்குது.

‘நெலம’ தெரிஞ்சு அவன் ஏற்கனவே கம்பி நீட்டீட்டான்னு அப்பறந்தான் புரியுது.

அப்புறம் என்ன.……..

”வழக்கம் போல”  ‘பொற்கால ஆட்சிக்காரங்க’ வழியிலேயே ஒருத்தன் நான் பேசப் பேச… “இது நியாயமா?”ன்னு கேட்டுகிட்டே போட்டான் ஒரு போடு மண்டைல……

“புரட்சி தலைவி வாழ்க’ன்னு சொல்றா”ன்னு சொல்லி இன்னொருத்தன் முட்டியப் பார்த்து போட்டான் ஒரு போடு.

“ஐயோ தோழரே..…! காப்பாத்துங்க”ன்னு சொல்லிக் கதறக் கதற…..

“நீ ஒரு நவீன வலதுசாரி”ன்னு சொல்லிகிட்டே ‘தோழர்’ உட்டாரு ஒரு குத்து மூஞ்சில……

கண்ணு லேசா சொருகறமாதிரி இருட்டிகிட்டு வந்துச்சு.

அதுக்கப்பறம் என்ன நடந்துச்சு…..? ஏது நடந்துச்சு…..? ஒரு எழவும்  தெரியல…….

vadi

(இதன் கிளைமேக்ஸ்….. செவ்வாய் கிழமையன்று……)


செருப்பால அடிச்சா புடிக்குமா? இல்ல வெளக்குமாத்தால அடிச்சா புடிக்குமா….?

$
0
0

(முந்தைய பதிவினை காண….)

irumbu2

ந்திரிச்சுப் பாத்தா…… பக்கத்து பெட்டுல நம்ம மார்த்தாண்டன் முக்கீட்டு மொணகீட்டு படுத்துகிட்டு இருக்கான்.

“தேவயானி ஸ்டைல்ல செவுரெட்டிக் குதிக்கிறேன்”ன்னு சொல்லி டிச்சுக்குள்ள குதிச்சுருக்கான் மகராசன். நாறிக் கெடந்தவனக் குளிப்பாட்டிக் கொண்டுவந்து இங்க போட்டுட்டுப் போயிருக்குது சனம்.

’என்ன மனித உரிமை…! நம்ம கதி இப்படி ஆகிப்போச்சு……?’ன்னேன்.

எதக் கேட்டாலும் எல்லாத்துக்கும் பதிலா நாக்கத் தொட்டுத் தொட்டுக் காட்டறான். ராத்திரில மட்டும் திடீர் திடீர்ன்னு……

”கலைஞர் வாழ்க…

புரட்சித் தலைவி வாழ்க…

தோப்பனார் வாழ்க…

போர்வாள் வாழ்க…

போர்க் கப்பல் வாழ்க…”ன்னெல்லாம் சத்தம் போடறான்..… ஊசி போட்டுத்தான் படுக்க வெக்க வேண்டியிருக்கு…..

ஊசி போட்டதும்….. ”மதவாதமா..…?” ”ஊழலா….?”ன்னு மொணகிகிட்டே தூங்கீர்றான்.

எங்களப் பாக்கறதுக்கு ஆசுப்பத்திரிக்கு வந்த ஒரே ஜீவன் நம்ம ஜ.நா.கா.ஜம்புதான். வந்ததும் வராததுமா…… ”எப்படியோ எலக்சனுக்குள்ள நீங்க செரியாயிட்டீங்கன்னா கூட்டிட்டுப் போயி ஓட்டப் போட்டுட்டு வந்தர்லாம்…..”ன்னான்.

‘இப்ப நாங்க இருக்குற நெலமைல நாக்குலதான் மை வெக்கோணும். இதுக்கு தேர்தல் கமிசன் அனுமதிக்குமான்னு Nigeria-Electionகேட்டுட்டு வந்துரு……ன்னேன்.

“எவ்வளவு ‘வாங்கினாலும்’ இந்த லொள்ளுக்கு மட்டும் கொறச்சலில்ல….”ன்னான் ஜ.நா.கா.

“சரி இவுங்கதான் இப்படி… மத்தவங்கள்ல யாரும் சரியில்லையா….?”ன்னான்.

“ஜ.நா.கா…! நீ இப்ப இந்தக் காட்சியத்தான பாக்குற…. தேர்தல் முடிவு வந்தப்பறம் பாரு… அந்தக் கண்கொள்ளாக் காட்சிகள.…

தி.மு.க கூட்டணி தோத்துதுன்னா… ‘தி.மு.க.வோட இந்து விரோதப் போக்குதான் எங்க தோல்விக்குக் காரணம்’ன்னு அறிக்கை உடும் பா.ஜ.க……

அ.திமு.க கூட்டணி தோத்துதுன்னா…… ‘கலைஞரையும் என்னையும் பிரிச்சது ஜெயலலிதா செஞ்ச சதி…… என்னையும் வாழப்பாடியையும் சேர்த்தது விதி செஞ்ச சதீ…’ன்னு அறிக்கை உடும் பா.ம.க.

தேர்தல்ல தோத்ததுக்கு என்ன அறிக்கை உடலாம்ன்னு த.மா.க முடிவு பண்றதுக்குள்ள அடுத்த தேர்தலே வந்துரும்……ன்னேன்.

“அதுசரி புண்ணாக்கு…..! இப்ப சாதிக் கட்சிக நெறையா வந்துருச்சுன்னும்……

அது சாதிக் கட்சிக அல்ல….. சாதிக்கின்ற கட்சிகதான்னும்  பேச்சு அடிபடுதே..… இதுல எது சரி…?”ன்னான்.

’சாதி ரீதியா ஒடுக்கப்பட்டவங்க தங்கள தற்காத்துக்கறதுக்கு ஒரு அமைப்பு வேணும்கறதுல தப்பே இல்ல. ஆனா ஊழல் குற்றச்சாட்டுல இருந்து தங்கள தற்காத்துக்கறதுக்காக சாதியக் கேடயமாக்கறதுதான் தப்பு. இப்ப மொளச்சிருக்கிற பல சாதிக் கட்சிக உண்மையிலேயே சாதிய ஒடுக்குமுறைக்கும் ஏற்ற தாழ்வுகளுக்கும் எதிரா குரல் கொடுக்கணும்கிற நோக்கம் இருந்திருந்தா குறைந்த பட்சம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகணும்கிறத ஒரு கோரிக்கையாகவாவது வெச்சிருக்கணும்…. ஆனா அதையெல்லாம் உட்டுட்டு ‘பத்து சீட்டு குடு’, ‘பதினைஞ்சு சீட்டு குடு’ன்னு நிக்கறதப் பாக்கறப்ப இவங்க உண்மையிலேயே சமூக இழிவப் போக்க வந்திருக்காங்களா? இல்ல….. சமூக அழிவக் குடுக்க வந்திருக்காங்களான்னு சந்தேகமா இருக்கு….ன்னேன்.

“சரி இதெல்லாம் கெடக்கட்டும் புண்ணாக்கு……

உண்மையச் சொல்லு…..

இந்த நாட்டுக்கு ரொம்ப ஆபத்து…

‘மதவாதமா…?’

இல்ல ’ஊழலா..?’ அதச் சொல்லு மொதல்ல…”ன்னான்.

அதுவரைக்கும் தூங்கிக்கிட்டு இருந்த மார்த்தாண்டன் திடீர்ன்னு எந்திரிச்சு… “ஜ.நா.க..! உன்ன செருப்பால அடிச்சா புடிக்குமா? இல்ல வெளக்குமாத்தால அடிச்சா புடிக்குமான்….?”னான்.

பயந்து நடுங்கீட்டான் ஜ.நா.கா.

“பயப்படாத அந்த மாதிரிதான் ரெண்டுமே. இவ்வளவு சோகத்துக்கு இடையிலேயும் நம்ம நாட்டுல தமாசுக்கு மட்டும் பஞ்சமேயில்ல….. அராஜகத்தப் பத்தி புரட்சி தலைவி பேசறாங்க…

ஊழலப் பத்தி கலைஞர் பேசறாரு…..

மத சார்பின்மையைப் பத்தி வாஜ்பாய் பேசறாரு……Booth3

சுயமரியாதையைப் பத்தி வீரமணி பேசறாரு…..

போபர்ஸ்ல அடிச்சவன்…… தெகல்காவத் திட்டறான்.

தெகல்காவுல அடிச்சவன்…. போபர்ஸத் திட்டறான்..… மொத்தத்துல நல்ல கூத்துதான் போ…”ங்கறான் மனித உரிமை மார்த்தாண்டன்.

ஆஸ்பத்திரிங்கறதையே மறந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டோம். நர்சு வந்து “சத்தம் போடாதீங்க”ன்னு திட்டீட்டுப் போனப்பறம்தான் கொஞ்சம் அமைதியானோம்.

“ஏம்ப்பா இதுதான் பிரச்சனைன்னா…… இவுங்களையெல்லாம் மாத்தீட்டு வேற நல்லவங்க அந்த எடத்துல உக்காந்தா செரியாயிடாதா பிரச்சனை…”ன்னான் ஜ.நா.கா. ஜம்பு.

“யப்பா… ஜம்பு! நம்மள அதிகம் பேச வைக்காதே…. இதெல்லாம் மேலோட்டமான பிரச்சனை…… இப்ப பேசிக்கறாங்களே… ‘ஜெயலலிதா முதல்வர் ஆக முடியுமா… முடியாதா…? கலைஞர் ஆவாரா மாட்டாரா…’ன்னு ஆனா யார் ஜெயிச்சாலும் உண்மையான முதல்வர் யாரு தெரியுமா?”ன்னான் மார்த்தாண்டன்.

”இதென்னய்யா புதுக் கரடி? யாரு ஜெயிக்கிறாங்களோ அவுங்கதானே முதல்வர்…?” ன்னான் ஜனநாயகக் காவலன் ஜம்பு.

“அதுதான் இல்ல… உண்மையான முதலமைச்சர் பெரிய பெரிய பன்னாட்டுக் கம்பெனிகளும்… உலக வங்கியும்தான். இதத் தெரிஞ்சுக்க மொதல்ல.

இருக்கற அரசோட நிறுவனங்களையெல்லாம் தனியாருக்கு தாரை வார்த்துட்டு இருக்குதுக அரசாங்கங்க…”ங்கிறான் ”மனித உரிமை” மார்த்தாண்டன்.

“ஒழுங்கா வேலை செய்யலைன்னா…… தனியார்கிட்ட உடாம வேற என்ன செய்யச் சொல்ற மார்த்தாண்டா…?”ன்னான் ஜ.நா.கா.

“அப்படிப் போடு அருவாள. இந்த அரசாங்கத்தோட வங்கிகளை எல்லாம் நம்பாம வட்டிக்குப் பேராசைப்பட்டு பெனிபிட் கம்பெனிகள்ல போட்டு உட்டாங்களே 1500 கோடி…… அப்பவுமா தெரியல தனியார் நிறுவனங்களோட லட்சணம்…”ன்னான், ‘மனித உரிமை’.

அதைக் கேட்டதும்தான் எரிச்சலாயிட்டுது எனக்கு.

இங்க பாரு மார்த்தாண்டா….! யாரை வேண்ணாலும் குத்தம் சொல்லு கேட்டுக்கறேன்… ஆனா நம்ம பெனிபிட் கம்பெனிக்காரனுகளோட ‘நேர்மைய’ மட்டும்  சந்தேகிக்காதே. அப்புறம் எனக்குக் கெட்ட கோபம் வந்துரும்…….ன்னேன்.

“அடப்பாவி புண்ணாக்கு! நீ இந்த பெனிபிட் கம்பெனிக் காரனுங்களையா நேர்மைன்னு சொல்றே”ன்னு கேக்குறான் ‘மனித உரிமை’.

’பின்ன என்ன…? அவனுக வசூல் பன்றதுக்கு முன்னாடியே ’நேர்மையா’ எழுதி மாட்டீட்டுத்தானே வசூல் பண்ணுனானுங்க…… நீயே கொண்டு போயி குடுத்துட்டு அவனுகளக் குத்தம் சொல்றியே நியாயமா……?ன்னேன்.

“என்னது……. எழுதி மாட்டீருந்தானுகளா? என்னன்னு?” பதறிப்போயி கேக்கறானுக நம்ம மார்த்தாண்டனும் ஜ.நா.கா.வும்.

ஆமா… பெருசா எழுதி… லேமினேட்டும் வேற பண்ணி வெச்சிருந்தானுகளே……

‘எதைக் கொண்டு வந்தாய்…

நீ அதைக் கொண்டு செல்ல…?

நேற்று உன்னிடம் இருந்தது….

இன்று என்னிடம் இருக்கிறது’ன்னு. அதையும் படிச்சுட்டுப் போயி ஏமாந்தா அதுக்கு அவுங்களா பொறுப்பு…?ன்னேன்.

விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டானுக மறுபடியும்.

 

“சரி கடைசியா என்னதான் சொல்ல வர்றே? அதையாவது சொல்லு…..”ன்னான் ஜ.நா.கா.

இங்க பாரு… நாட்டோட பொருளாதார நெலமையே நாசமாயிட்டு இருக்குது… நாம நல்ல டீத்தூளை ஏத்தி அனுப்பீட்டு டஸ்ட் டீயைக் குடிச்சிகிட்டிருக்கோம்……

அரிசிய ஏற்றுமதி பண்ணீட்டு ஹாலந்துல இருந்து மாட்டுச் சாணிய எறக்குமதி பண்ணிகிட்டிருக்கோம்…..

எளனி குடிக்குறத உட்டுட்டு பெப்சிக்குத் தாவீட்டோம்…..

போடற அண்டர்வேருகூட வெளி நாட்டுதுதான் வேணும்ன்னு ஆயிடுச்சு…
Booth1ஊருல தொழில் செய்யறவனெல்லாம் ஓட்டாண்டி ஆயிட்டான். கொஞ்ச நேரம் முதுகக் காட்டீட்டு உக்காந்தாக்கூட…. ”இந்தப் பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்…..”ன்னு அதுக்குக் கீழ எழுதீட்டுப் போயிடறான்…

இந்த நெலமையே நீடிச்சுதுன்னா… வெறும் கொடியேத்தறதுக்குத்தான் மொதலமைச்சர்-பிரதமர்ங்கிறதும்கூட  மாறி……

”இந்த ஆண்டு சுதந்திர தினத்தை உங்களுக்கு வழங்குபவர்கள்…..”ன்னு கொக்கோக் கோலோக்காரனோ….. பெப்புசிக்காரனோ…… கொடியேத்தீட்டுப் போகப் போறானுக……

இது வெளங்காம… மேலோட்டமா கண்டத எல்லாம் பேசீட்டு சுத்துதுக பலது… புருஞ்சுதான்……?ன்னேன்.

“புண்ணாக்கு, இதுல இவ்வளவு இருக்கா…?”ன்னு வாயப் பொளந்துட்டான் நம்ம ஜ.நா.கா.

ஆனாலும் அவன் ‘அரிப்பு’ விடுமா…..?

“சரி….. எங்கிட்ட மட்டும் சொல்லு… இப்ப உள்ளவங்கள்ல நல்லவங்க யாருமே இல்லையா? அப்படீன்னா….. நீ ஓட்டே போடப்போறதில்லையா?”ன்னான் நைசா காதுக்குள்ள.

’ஒரே ஒரு நல்ல ஆளு இருக்குது. அந்த ஆளக் கூட்டீட்டு வந்தா வேண்ணா ஓட்டுப் போடறேன்…..’ன்னேன்.

“யாரு…… யாரது…… சீக்கிரம் சொல்லு”ன்னு பறக்கறான் ’ஜன நாயகக் காவலன்’.

’நீ முத்து காமிக்ஸ் படிச்சிருக்கியா…?’ன்னேன்.

“ஓ… சின்ன வயசுல பலதடவை படிச்சிருக்கேன்”ன்னான்.

அதுல வருவாரில்ல…… ‘இரும்புக் கை மாயாவீ’ன்னு ஒருத்தர், அவரு வந்தா வேண்ணா பாக்கலாம்…ன்னேன்.

“இந்த வெளையாட்டெல்லாம் என்கிட்ட வெச்சுக்காதே…… யோவ்! சுத்தி வளைக்காம சுருக்கமாச் சொல்லு நேரமாகுது……”ன்னான் ஜ.நா.கா.ஜம்பு.

“கோவப்படாத ஜ.நா.கா…! பெரியார் ஒரு தடவ சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருது.”

“என்ன?”ன்னான் எரிச்சலோட.

“முட்டாளுக ஓட்டுப் போட்டு அயோக்கியனுக ஆட்சிக்கு வர்றதுதான் தேர்தல்…”ன்னாரு.

“அப்போ…..?”

’நான் மறுபடியும் முட்டாளாக விரும்பல…:ன்னேன்.

”அப்படீன்னா…?”

யாரும் என்னால அயோக்கியனாகறதையும்  நான் விரும்பல……. போதுமா…?

 

Periyar03

 

(நன்றி : குமுதம் 17.05.2001)


அடைபட்ட கதவுகளுக்கு முன்னால்….

$
0
0

என் கைகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன…..

கண்களில் என்னையுமறியாமல் நீர் தாரை தாரையாய்….

இனியும் வாசிக்க முடியாது இதை.

ARPUTHAMMALஇது வெறும் எழுத்துக்களல்ல.

ஒரு மனுசியின் இதயம். சகல திசைகளிலும் ஆறுதலை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போன இதயம்.

படிக்கத் திராணியற்று அப்புத்தகத்தை மூடி வைக்கிறேன். என்ன செய்வது என்று தெரியவில்லை….

 

இப்போதைய ஒரே ஆசுவாசம் சிகரெட்தான்.

பற்றவைக்கிறேன்.

 

தொடர்ந்து வாசிக்க…..

http://andhimazhai.com/news/view/pamaran-28-04-2014.html


நினைவுகளைச் சுமந்தபடி முதல் ஆண்டில்….

$
0
0

தோழர் மணிவண்ணனின் நினைவுகளில்…

Manivannan (4)

நமது நேசத்திற்குரிய இயக்குநர் மணிவண்ணன் அவர்களின் “மணித்துளிகள்” நூல் வெளியீட்டு விழா கோவையில் இருந்து நேரடி ஒளிபரப்பு.   நேரடி ஒளிபரப்பைக் காண புகைப்படத்தின் மீது “கிளிக்” செய்யவும்…

(15.06.2014 ஞாயிறு அன்று மாலை 5.30 மணியிலிருந்து நேரலை தொடங்கும்.)


எங்கேயோ கேட்ட குரல்…

$
0
0

Alutha1

நாம் இதனை நியூயார்க் நகரில் இருந்தே ஆரம்பிக்கலாம்.

ஒரு காலைப் பொழுதொன்றில் நியூயார்க் நகர வீதியில் வந்து கொண்டிருந்த இளைஞன் அருகிலுள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறான்.

அந்த நேரம் பார்த்து எதிர்பாரா விதமாக சிறுமி ஒருத்தியின் மீது நாய் ஒன்று பாய்கிறது. அதுவும் வெறி பிடித்த தெரு நாய். (விலங்குகள் நலச் சங்கத்தினர் மட்டும் இதைத் திரு.நாய் என்று மாற்றிப் படிக்கவும்). நாய் சிறுமியைக் குதறத் தொடங்க மற்ற சிறுவர்களும் பெற்றோர்களும் பயத்தில் தெறித்து ஓடுகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து கொண்டிருக்கிற அந்த அவலத்தைக் கண்டு பூங்காவினுள் பாய்கிறான் அந்த இளைஞன். வெறி பிடித்த நாயோடு கடுமையாகப் போராடி இறுதியில் அதைக் கொன்று சிறுமியின் உயிரைக் காப்பாற்றுகிறான்.

வழக்கம்போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு போலீஸ் அந்த இளைஞனின் அருகில் வந்து… “நீதான் உண்மையான கதாநாயகன்… நாளை காலை பேப்பரில் பார். ‘வீரம் மிக்க ஒரு நியூயார்க்காரன் வெறிபிடித்த நாயோடு போராடி ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றினான்’ என்று வரும்…” என்கிறான்.

அந்த இளைஞனோ “நான் நியூயார்க்காரன் இல்லையே அய்யா…” என்கிறான் அப்பாவியாக..

“சரி விடு அப்படியானால் ‘அமெரிக்க இளைஞன் ஒருவன் தீரமாக நாயோடு போராடி ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றினான்’ என்று பேப்பரில் வரும்’ என்கிறான்.

அதற்கும் அந்த இளைஞன் அய்யா நான் அமெரிக்காவைச் சேர்ந்தவனும் இல்லையே என்கிறான் மீண்டும் அப்பாவியாக.

“அட அப்ப நீ அமெரிக்கனும் இல்லையா… அப்படியானால் நீ எந்த நாடு? அதையாவது சொல்” என்கிறான். “அய்யா நான் ஈராக்கில் இருந்து வருகிறேன் என்று சொல்ல…

அடுத்த நாள் அந்த போலீஸ்காரன் சொல்லிச் சென்றது மாதிரியே பேப்பரில் செய்தி வருகிறது இப்படி :

http://andhimazhai.com/news/view/sothappal-14-07-2014.html

 


நோக்கு என்ன தோன்றது….?

$
0
0

kanchi-seer3

ஏழாவது வயதிலேயே பெண்ணுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும். அந்த வயதில் அவளுக்குக் கணவனாக வருகின்றவனிடம் அவள் தன்னை ஒப்படைத்து விடவேண்டும். அவனையே குருவாகவும் தெய்வமாகவும் ஏற்று அவனுக்குத் தன்னை அர்ப்பணித்து விடவேண்டும்.

வயது ஆகிவிட்டால் பெண் எதிர் கேள்வி கேட்பாள். அதனால் இளம்வயதிலேயே அவளை ஒருவனிடம் அர்ப்பணித்துவிட வேண்டும். அதன் பிறகு அவளுக்கென்று எதுவும் இல்லை.”
- ‘பெரியவா” சந்திரசேகேந்திர சங்கராச்சாரி ஸ்வாமிகள் -

தெய்வத்தின்   குரல் – பாகம் இரண்டு.

 

இவா இப்படி சொல்றா…

 

ஆனா மதுரை கோர்ட்….

“18 வயது நிறைவடைந்த பெண்ணுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை வழங்குவதில் எந்த தவறும் இல்லை. அதற்கு உரிய மனநிலை அவர்களிடம் இருக்கும்.

ஆனால், திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்க ஒரு பெண்ணுக்கு 18 வயதில் மனம் மற்றும் உளவியல் ரீதியாக வளர்ச்சி இருக்காது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண்ணின் திருமண வயது 18 என்று எந்த அடிப்படையில் அரசு நிர்ணயித்துள்ளது என்பது தெரியவில்லை. எனவே, பெண்ணின் திருமண வயது 18 என்பதை உயர்த்த வேண்டும். அரசு இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும்.”

 

அப்படீன்னு சொல்றது….
நேக்கு என்ன தோன்றதுன்னா…

பேசாம பொம்மனாட்டிக விவாஹ வயஸை 80 ஆக்கீட்டா பாவம் இல்லையோன்னு தோன்றது.

அப்பத்தான் கண்டவாகூட கலப்பில்லாம போறதுக்கும்….

அப்படியே போனாலும் அவா ஸந்ததி பெருகாம போறதுக்கும் ஒரு Chance இருக்கும்.

 

இதை Brahmins மட்டுமில்ல Converted Brahmins ம் உற்சாகமாத்தான் ஏத்துக்குவா…

 

நோக்கு என்ன தோன்றது….?


அறையென்று அழைக்கப்பட்டாலும் அது அறையல்ல……

$
0
0

WP_20140817_011

அறையென்று அழைக்கப்பட்டாலும் அது அறையல்ல. ஐந்தாறு அறைகள். அதற்காக வீடென்றும் அழைக்க முடியாது. வீட்டிற்கான அடையாளங்கள் எதுவும் அங்கிருக்காது. வேண்டுமானால் கூடென்று சொல்லலாம். கூட்டிற்கான பிரதான நிபந்தனைகளில் ஒன்று அங்கு எங்கும் நாட்காட்டியோ…. கடிகாரமோ இருக்கக்கூடாது.

 

பிழைத்தலின் நிமித்தம் வேலைக்குப் போன பறவைகள் அந்தி சாயும் நேரத்தில் கூடு நோக்கி வரும்.

வேலைக்கு டிமிக்கி கொடுத்த பறவைகள் சில அறைகளில் உலவும்…..

”உழைப்பை ஒழிப்போம்” என்கிற உன்னத தத்துவத்தை உயர்த்திப் பிடித்த ஓரிரு பறவைகள் கையில் கிடைத்த புத்தகங்களோடு மூலைகளில் முடங்கிக் கிடக்கும்.

 

பறந்த பறவைகள் ஒவ்வொன்றாக வர…. ஐந்து ஐந்தரைக்கு மேல் சூடுபிடிக்கும் கூடு. அரை மணி DSC_4708நேரத்துக்கு ஒரு முறை டீ…. சிகரெட் என பத்து மணி வரை நீளும் பேச்சு. சில வேளைகளில் பேச்சு விவாதங்களாகி பொறி பறக்கும்.

தேசிய இனப் பிரச்சனை தொடங்கி தெற்கு சூடான் வரைக்கும்….

ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கி இங்கிலாந்தின் இன்றைய நிலைப்பாடு வரைக்கும்…

பெரியார்…. நீட்ஷே….

அனுஷ்கா….. சமந்தா…..

அம்பேத்கர்…. வள்ளலார்….

நலன்…. ரஞ்சித்….

ஹமாஸ்….. எட்வேர்ட் செயித்….

நீயா நானா?…. அக்னிப்பார்வை….

மகாத்மா பூலே…. ஓஷோ….

நயன்தாரா…. ஜெயமோகன்…

விக்ரமாதித்யன்…. கல்யாண்ஜி…

சாரு நிவேதிதா….. சேலம் சிவராஜ் சித்த வைத்தியர்…

என எதுவும் மிச்சம் இருக்காது. மணி பத்தைத் தொடும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு உள்ளது நினைவுக்கு வரும்.

”அய்யய்யோ மாவு வாங்கீட்டுப் போகணும் மறந்துட்டேன்” எனக் கிளம்பும் ஒன்று.

DSC_1179”நாளைக்குக் காலைல எட்டு மணிக்கே செமினார்…. கெளம்பறேன்” எனப் புறப்படும் மற்றொன்று.

”பஸ்ஸுக்கு பத்து ரூபா குடுங்க” என்றபடி ஜூட் விடும் வேறொன்று.

வாரத்தில் ஓரிரு நாட்கள் தமிழக மக்களது வளர்ச்சித் திட்டங்களை மனதில் கொண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாடிக்கையாளராவதும் உண்டு. அந்த இரவுகள் மட்டும் சற்று நீளும். உறங்கும்வரை உடனிருப்பார் பண்ணைப்புரத்துக்காரர்.

இத்தனை ஜென்மங்களுக்கும் சேர்த்து யார் வீடு கொடுப்பார்கள்?

வீடு கேட்டுப் போகும்போதே அவன் வீட்டு வாடகைக்கு ஆள் பிடிக்கிறானா அல்லது அவன் பெண்ணுக்கு மாப்பிளை பிடிக்கிறானா? என்கிற அளவுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொல்வார்கள். சாதி கேட்ட ஒரு வீட்டுக்காரனிடம் ஏன் உன் தங்கச்சியக் கட்டி வைக்கப் போறியா? என்று கேட்டது தப்பாம்.

ஆனால் அப்படிக் கேட்காத தெய்வப்பிறவிகளும் உண்டு. அதில் ஒன்றுதான் தங்க முருகன். எழுத்தாளர் என்று சொன்னதுமே மகிழ்ச்சி ஆகிவிட்டார் மனிதர்.

வாடகை? நாம் சொன்னதுதான்.

அட்வான்ஸ்? திருப்பிக் குடுக்கறதுதானே எவ்வளவு வேணும்ன்னாலும் குடுங்க என்றார். அப்போது அவருக்குத் தெரியாது வேலியோரமாய்ப் போய்க்கொண்டிருக்கிற டைனோசருக்கு அழைப்பு விடுக்கிறோம் என்பது.

அது ஒரு மே மாதக் காலைப் பொழுது.  நம் ஈழத்து மக்களைக் கொன்றொழித்துக் கொண்டிருந்த துயர் உச்சகட்டமாக  தலைவிரித்தாடிய நேரம். விபத்தொன்றில் சிக்கி காலில் அறுவை சிகிச்சை DSC_1929செய்யப்பட்டு படுத்திருக்கும் என்னைப் பார்க்க அறைக்கு வருகிறார் தோழர் கொளத்தூர் மணி. மனமும் உடலும் ஒருசேர காயப்பட்டிருந்த எமக்கு ஒத்தடமாய் அமைகிறது அவரது வருகை. அறையில் அவரது பேச்சைக் கேட்டபடி ஏறக்குறைய இருபத்தி ஐந்து பேர்.

யாரும் எதிர்பாராமல் அந்த வேளையில் திடீரென வந்து நிற்கிறார் வீட்டின் ”உரிமையாளர்”. கொளத்தூர் மணி தோழரை அறிமுகப்படுத்தி வைக்கிறோம். அமர்கிறார்….

சுற்றும் முற்றும் பார்க்கிறார்…….

என்னடா நம்ம வீட்டில் இத்தனை பேர்….. அதுவும் சம்மணம் போட்டு அமர்ந்தபடி….. பொட்டலச் சோற்றை உண்டபடி…. அப்போது இருந்தது அறையிலேயே ஓரிரு நாற்காலிதான். கொஞ்ச நேரம் பேசுவதைக் கேட்டிருந்துவிட்டு எனக்கு முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு என விடுவிடெனக் கிளம்பிப் போய்விடுகிறார்.

போச்சுடா… இனி அடுத்த வீடு பார்க்க வேண்டீதுதான்…. என எண்ணியபடி தோழர்களைப் பார்க்கிறேன்….. அவர்களும் நமட்டுச் சிரிப்பை உதிர்க்கிறார்கள்……. தோழரோடு தொடர்கிறது உரையாடல்.

தோழர் கொளத்தூர் மணி புறப்பட்டுச் சென்று அரை மணி நேரம் ஆகியிருக்கும். அறை வாயிலில் வந்து நிற்கிறது ஒரு மெட்டோடார் வாகனம். அதிலிருந்து இருவர் பத்து புத்தம் DSC_0184புதுச் சேர்கள்…… ஒரு கட்டில்… என பல பொருட்களை இறக்குகிறார்கள். புரியாமல் பார்க்கிறோம்.

”வீட்டு ஓனர் தங்கமுருகன் இதை உங்களுக்கு இறக்கி வெச்சுட்டு வரச் சொன்னாருங்க…” என்கிறார் வண்டி ஓட்டி வந்தவர். இப்படித்தான் தொடங்கியது எங்களுக்கும் அவருக்குமான தோழமை. அதன் பிற்பாடு தொ.ப.வைப் பார்க்க திருநெல்வேலியா….? ”உழைத்த களைப்பைப் போக்க” மூணாறா…..? எங்கு சென்றாலும் அவரும் எங்களுடன். அல்லது அவருடன் நாங்கள்.

 

நாங்கள் முதலில் குடிபுகும்போது அறையின் வாசலெங்கும் நத்தைகள் நூற்றுக்கணக்கில் இருக்கும். கொஞ்சம் தேள்கள்… ஒரே ஒரு ஏழரை அடி பாம்பு…. நத்தைகளும் தேள்களும் ”இவனுக மத்தீல DSC_4690பொழைக்க முடியாதுடா சாமி” என வேறிடம் பார்த்துப் போக….. பாம்பு மட்டும் வழக்கமான அதனது வழித் தடத்தில்…. அதுவும் எங்களைக் கண்டு கொண்டதில்லை. நாங்களும் அவ்விதமே…. அறையின் முன்புறம் முட்செடிகளோடு பத்துப் பதினைந்து செண்ட் காலியிடம். ஓரிரு மரங்கள். காலை ஆறு மணிக்கெல்லாம் தேன் சிட்டுகளின் கொஞ்சல்களும்….. அணில்களது குதூகலமும்…. மைனாக்களின் மயக்கும் குரல்களும் ஆரம்பித்து விடும். செம்பூத்தும்…. ரெட்டை வால் குருவியும் அவ்வப்போது வந்து போகும். சில நேரங்களில் மயில்களும். எழுந்து பார்த்து ரசித்துவிட்டு ஒண்ணுக்கூற்றிய கையோடு உறங்கப்போய் விடுவோம். அப்படித்தான் எங்கிருந்தோ வந்து சேர்ந்தது இரண்டு நாய்களும். ஒன்று விருமாண்டி…. மற்றொன்று கருமாண்டி.. இந்த ரெண்டும் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவுக்கு நேர் எதிர் ரகம். சைவத்தை மோந்துகூட பார்க்காது.

அறைத் தோழனின் திருமண வரவேற்பு…

அவர்களது மழலைகளின் பிறந்தநாள் விழாக்கள்….

எல்லாமே அறையில் தூள் கிளப்பும்.

பொங்கல் வந்துவிட்டால் போதும்….. பட்டம்…. கோலிகுண்டு…. பம்பரம் என அந்த ஏரியாவே DSC_6142அல்லோலகல்லோலப் படும். போனமுறை ஜமாப் வேறு. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது எல்லோரது குடும்பங்களும் அறையில் ஒன்று கூடும். அப்போதெல்லாம் மதிவதனி, இலக்கியா, சூர்யா, தமிழினி, ஹர்ஷவர்த்னி, கவினி, தமிழ்த்தென்றல், கோதை,  சாந்தலா, கயல், நித்திலன், தமிழோவியா, சொற்கோ, யாழினி, ஆதிரா என எண்ணற்ற சிறுவர்கள் கைப்பற்றிக் கொள்வார்கள் அறையை.

இடையில் விருந்தினர்கள் வருகையும் உண்டு. அப்படி யாராவது வரவேண்டும் என்று காத்திருப்போம் நாங்கள். அப்போதுதான் அறை கொஞ்சமாவது சுத்தமாகும். தோழர் மணிவண்ணனது விமானம் கோவையில் தரை இறங்கிய நாற்பத்தி ஐந்தாவது நிமிடம் DSC_0082அவரது வாகனம் எங்கள் வாசலில் வந்து நிற்கும். எப்போதாவது இயக்குநர் மகேந்திரன் அய்யா, சத்யராஜ், பாலா, முத்துக்குமார், அஜயன்பாலா என எம் நட்பு வட்டத்தினர் வந்து போவர்.

காம்ரேடுகளால் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அலெக்ஸ் பால் மேனன் தொடங்கி கூடுதலாய் எம்மை நேசிக்கும் கூடுதல் பதிவாளர் செந்தமிழ்ச் செல்வன்…..

உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கர், குமாரதேவன் தொடங்கி உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் பிரபு, பாரி…. எனப் பலரின் பாதம் பட்டிருக்கிறது இந்த அறையில்.

சி.மோகன்,  பாதசாரி,  சிறீபதி பத்மநாபா,  ஒடியன் லட்சுமணன் போன்ற இலக்கியவாதிகளிடமும் இந்த அறையில்   இளைப்பாறியிருக்கிறோம்.

ஈழத்து உறவுகளான கருணாகரனுக்கும், காண்டீபனுக்கும் இது இன்னொரு தாய்வீடு. அமெரிக்காவில் அல்லல்பட்டாலும் தோழன் உலகனுக்கு இது உற்ற கூடு.

அறை என்பதைவிடவும் எங்கள் கம்யூன் என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்க முடியும். DSC_1791வாடகையா? எல்லோரையும் காசு போடச் சொல்லி துண்டேந்திவிடுவோம். விழாக்களுக்கான செலவா? எல்லோருடைய பங்களிப்பும் நிச்சயம் இருக்கும். ஒவ்வொருவரும் ”சொந்த” வீட்டிற்காகத்தான் மெனக்கெடுவார்கள். ஆனால் இது தோழர்களுக்கென்றே ஒரு வீடு….. அதன் திருவிழாக்கள்…. அதன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள்…. என உணர்வுகளால் கட்டப்பட்ட கம்யூன் இது.

அறையின் முன்புறம் உள்ள வீடு தோழர் மகிமைநாதனுடையது. அவர் அந்தக் காலத்திலேயே தம் மகன்களுக்கு லெனின், இங்கர்சால், ரூசோ, சாரு மஜூம்தார் எனப் பெயர் சூட்டியவர். அவரது துணைவியோ அதற்கும் மேல். எந்த நேரம் எமக்கு எது தேவையென்றாலும் தயங்காமல் உதவி செய்வார். ”தோழர்…. நீங்க இருக்குறதுனால இங்க திருட்டு பயமே இல்லை….. ஏன்னா நீங்க விடிஞ்சாத்தானே தூங்கவே போறீங்க” என்பார் அந்த அறுபத்தி ஐந்து வயது அம்மா. வயதில் அவ்வளவு மூத்தவர் எம்மைத் ”தோழர்” என்றழைப்பது மற்றவர்களது புருவங்களை ஆச்சர்யத்தில் உயர வைக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாய் அறையின் அடித்தளமாக இருந்தது தோழர் பெத்து என்றழைக்கப்படும் DSC_0630சுரேஷின் உறவுதான். செடிகளைச் சுத்தம் செய்ய வேண்டுமா? ஜமாப் சொல்ல வேண்டுமா? மரம் நட வேண்டுமா? சீரியல் லைட் போட வேண்டுமா? உணவு தயாரிக்க ஆள் ஏற்பாடு செய்ய வேண்டுமா? எதுவாயினும் தோழர் பெத்துவின் படை வந்து இறங்கிவிடும்.

இப்படி சீரும் சிறப்புமாய் சிலாகித்த அறையைக் காலி செய்ய வேண்டிய காலமும் வந்தது.

சென்னையில் இருந்தோ ஐதராபாத்தில் இருந்தோ தோழர் மணிவண்ணன் அழைக்கும் போதெல்லாம் அவர் கேட்கும் முதல் கேள்வி “தோழர் எங்க முல்லைத் தீவுலயா இருக்கீங்க?” என்பதுதான். எங்கள் முல்லை நகர் அறைக்கு அவர் வைத்திருந்த பெயர்தான் முல்லைத் தீவு. முல்லை நகரைக் கூட முல்லைத் தீவாய் நேசித்தவரை தீயின் நாக்குகளுக்கு தின்னக் கொடுத்த சில வாரங்களுக்குப் பின் ஒரு தொலைபேசி அழைப்பு. தோழரின் மகள் ஜோதிதான் அழைத்தார்.

”சொல்லுமா ஜோதி” என்றேன்.

“அங்கிள்…. அப்பாவோட புக்ஸ் எல்லாம் உங்குளுக்கு அனுப்பி வைக்கலாம்ன்னுட்டு இருக்கோம்….. Manivannan (4)அவுரோட புக்ஸ் எல்லாம் உங்க ரூமோட ஒரு மூலைல இருந்தாக்கூட அப்பா ரொம்ப சந்தோசப்படுவாரு அங்கிள்….”

அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றேன்.

சொன்னபடியே புத்தகங்களும் லாரியில் வந்து சேர்ந்தது. இப்போது அடுத்த பிரச்சனை. இத்தனை புத்தகங்களையும் எங்கே வைப்பது? இருக்கிற இடம் பத்தாது. தோழர் மணிவண்ணன் நூலகத்திற்கென தனி வீடும்…. தோழர்கள் ஒன்றுகூட தனி வீடும்…. என சமாளிப்பதற்கு எவரிடம் வசதி இருக்கிறது? ஒரே வழி இரண்டையும் ஒரே இடத்தில் வைத்துக் கொள்ள வேறு வீடு பார்ப்பதுதான்.

பார்த்தோம்.

பெரிதினும் பெரிதாய் மற்றொரு வீடு.

அதற்கான அட்வான்ஸையும் தங்கமுருகனே கொடுத்துக் குடியேற்றினார். பெரிய வீடு…. புத்தகங்களை வசதியாக வைக்கலாம். வாடகைக்கு மாதம் ஒரு தோழரிடம் பிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

வசதியோ வசதி. வசதிக்கு என்ன குறைச்சல்?

ஆனால்….

வழக்கமாய் வரும் அந்த அணில்களையும்…

தேன் சிட்டுக்களையும்….

மைனாக்களையும்….

விருமாண்டி-கருமாண்டியையும்….

இது வரைக்கும் எங்களுக்கு எந்தத் தீங்கையும் இழைக்காத அந்த ஏழரை அடி பாம்பையும் என்ன சொல்லி இங்கே அழைத்து வருவது?

 

DSC_1815

 

நன்றி : “அந்திமழை” மாத இதழ்.



அந்த மனிதன் யாருக்காக உழைத்தான்?

$
0
0

அந்த மனிதன் யாருக்காக உழைத்தான்?

யாருக்காக  எழுத்துக்களை விதைத்தான்?

யாருக்காக சண்டையிட்டான்?

யாருக்காக கோபம் கொண்டான்?

அவன் யார் யாருக்காக சிந்தித்து செயல்பட்டானோ அவர்களிலேயே பலருக்கு அந்த மனிதனைத் தெரியாது. ஏனெனில் அவன் சிந்தித்து செயல்பட்ட தளம் அப்படி.

ஆகவே……

தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும்….

தெரியாதவர்கள் அறிந்து கொள்ளவும் வாருங்கள்.

அந்த ஞாயிறு பொழுதை மேலும் பயனுள்ள பொழுதாக ஆக்குவோம்.

mss pandian karutharangam new


வெங்காயிஸ்டுகள் …..!

$
0
0

இங்கே இருக்கிற இந்திய கம்யூனிஸ்ட் வீரர்கள், சாதிக் கொடுமையைப் பற்றி இன்றுவரை ஒரு பேச்சுக்கூட பேசுவதேயில்லை. நாம் இதைப் பற்றிப் பேசினாலோ, “சே, சே இது பிற்போக்கு சக்தி பேச்சு. நாங்கள் பெரிய, பெரிய உலக விஷயத்திலெல்லாம் கவனம் செலுத்துகிறோம். இந்த சின்ன சங்கதிக்கு நாங்கள் கவலைப்படவில்லை.” என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்களே !

கம்யூனிச கொள்கையை எதிர்க்கிறவனல்ல நான். இன்றைய ‘கம்யூனிஸ்டுகள்’ periyar_20050822கோவணங்கூட கட்டத் தெரியாதிருந்த காலத்திலேயே – நான் உண்மைக் கம்யூனிஸ்ட் கொள்கையைப் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறேன். முதன் முதல் இந்த நாட்டில் சமதர்மப் பிரச்சாரம் செய்து, அதற்காகவே சிறைப்பட்டவன் நான்.

சாதி முறையைப் பற்றியும், பார்ப்பனீய முதலாளித்துவத்தைப் பற்றியும் இவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டாமா? பேதத்தை ஒழிப்பதற்குப் பாடுபட வேண்டாமா? அதைச் செய்திருந்தால், இந்த நாட்டில் கம்யூனிசம் எவ்வளவோ வளர்ந்திருக்குமே. அதை விட்டு விட்டு ‘பிற்போக்கு சக்தி’ என்ற பல்லவி பாடிக் கொண்டிருந்தால், இவர்களென்ன கம்யூனிஸ்டுகள்?

வெங்காயிஸ்டுகள் !.

  • தந்தை பெரியார் – 10-09-1952

பலே பாண்டியா…..!

$
0
0

MSSP

அறையில் இருந்து வரும் வழியில் இடது பக்கம் அந்தக் குளக்கரை இருக்கிறது. பலமுறை அதைக் கடக்கும் முன்னர் வண்டியை நிறுத்தி உச்சா அடித்துவிட்டு அங்கு நின்று அதனை ரசித்துக் கொண்டிருப்பேன். மரங்கள் சூழ கொக்குகள் உலவும் இடம் அது. அன்றும் அப்படித்தான். வானில் பறக்கும் நாரைகளை நின்று ரசித்துக் கொண்டிருந்தேன். ஒரு விமானம் போல மேலெழுந்து நேர்த்தியாகப் பறந்து செல்லும் காட்சி அற்புதமாக இருந்தது. சிகரெட் ஒன்றைப் பற்றவைத்தபடி அல்லியும் தாமரையும் பூத்துக் கிடந்த அந்தக் குளத்தை கண்களால் விழுங்கியபடி இருந்தேன். ரொம்பநாள் ஆயிற்று. இப்படி ஓர் ரம்மியமான காட்சியும்… சுற்றியிருக்கும் அமைதியும் கிடைத்து.

நான்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனே….. அப்படியெல்லாம் தொடர்ச்சியாக ஒரு இருபத்து நான்கு மணிநேரம் மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது என்று.

இயற்கைக்கு அது பொறுக்காது. அழைத்தது அலைபேசி. எடுத்துப் பார்த்தால் சமூக ஆய்வாளர் சித்தானையிடம் இருந்து அழைப்பு. எடுத்ததுமே “அண்ணாச்சி உங்களுக்கு யாராவது தகவல் சொன்னார்களா?” என்றார். இல்லையே தோழா ஏன்? என்ன தகவல்? என்றேன். ”நம்ம பாண்டியன் அண்ணாச்சி போய்ட்டாரு. இப்பதான் தகவல் வந்தது…. டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பிட்டல்ல வெச்சிருக்காங்க….” மறுமுனையில் சித்தானை ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். தோழர்….. போயிட்டீங்களா தோழர்…….. கண்களை உடைத்துக் கொண்டு குளத்தில் இருந்து நீர் தாரை தாரையாய்…. என்ன செய்வது? ஏது செய்வது என்று ஒன்றும் புரியாமல் அந்த இடத்திலேயே கொஞ்சநேரம் நின்றிருந்தேன். ஆக….. பாண்டியன் போயாச்சு.

முழுவதையும் வாசிக்க கீழே உள்ள இணைப்பை  சொடுக்குங்கள் :

http://andhimazhai.com/news/view/pandian-15-12-2014.html


ஏன் என்ற கேள்வி….

$
0
0

Thaali4
அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான்.
ஆயினும் வேறு வழியிருக்கவில்லை.

நொடிகள்…மணிகள்…நாட்களென நேரங்கள் நழுவினாலும்… அத்தகையொரு கேள்வி தவிர்க்க முடியாது போயிற்று எனக்கு. வலிகளின்றி வழிகளில்லையே எங்கும்.

“ஒவ்வொரு சமூக மாற்றத்திற்குப் பின்னாலும் ஒரு சுயமரியாதைக்காரனின் ரத்தம் சிந்தப்பட்டே வந்திருக்கிறது” என வேதம் புதிது திரைப்படத்தில் ஒலித்த பாரதிராஜாவின் குரலைப் போல உள்ளத்திற்குள் ஒரு குரல் ஒயாது ஒலித்துக் கொண்டே இருந்தது.

அத்தகைய கேள்வியால் எழும் வலி அதிகமானதுதான். ஆனால் அது அவசியமானது. அப்படிக் கேட்டிருக்கக் கூடாது தான். ஆயினும் வேறு வழியிருக்கவில்லை. அதுவும் அம்மாவிடம்.

அப்படியொன்றும் அவள் அசடுமில்லை. எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே பால்மார்க்கெட் பக்கமிருக்கும் நூலகத்திற்குக் கூட்டிப்போய்…அன்றைக்கு உருப்படியாக இருந்த ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதானி’லிருந்து ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ வரைக்கும் எண்ணற்ற நூல்களை எனக்குப் பரிச்சயப்படுத்தியவள்தான்.

என்றைக்குமே ‘சீராக்குகிறோம்’ எனும் போர்வையில் எனது சிறகுகளுக்கு சிரச்சேதம் நடத்தியதில்லை எனது பெற்றோர்கள். மகனாயிருந்தாலும் மாற்றுக் கருத்துக்களுக்கு மகத்தான மதிப்பளிக்க மறுத்ததேயில்லை அவர்கள். ஆனாலும்கூட அது தவிர்க்க முடியாது போயிற்று. அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான்.

அப்போதைய சிக்கலுக்கு மூலகாரணம் ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணுவதில் வந்த சிக்கலல்ல அது. ஆயிரம் உண்மைகளைச் சொல்லி ஒரு இல்லற வாழ்க்கையைத் துவக்குவதில் வந்த தடங்கல் அது.

எனக்கு துணைவியாகப் போகிறவர் வேறு “மதம்” (?)…….
தடுக்கவில்லை அம்மா.

முதலில் கருத்தரங்கு பிறகுதான் திருமணம்…
தடுக்கவில்லை அம்மா.

சாதியில் ”உயர்ந்ததாக” நம்பிக்கொண்டிருக்கும் ஒருவரை அழைத்து வந்து அபத்தச் சடங்குகள் நடத்த அனுமதியில்லை……
தடுக்கவில்லை அம்மா.

பெண்ணை இழிவுபடுத்தும் ‘தாலி’யையும் கட்டப்போவதில்லை..
ஆனால்….தடுக்காமல் இருக்கவில்லை அம்மா.

எண்ணற்ற மாற்றங்களை ஏற்றுக்கொண்டவர்தான் எனினும் இதை மட்டும் ஏற்றுக்கொள்ளவேயில்லை.

“ஒரு பெண் திருமணமானவள் என்பதற்கான அடையாளம்தான் என்ன?” என்றாள்.

அப்படியானால் அதே அடையாளங்கள் ஆணுக்கு மட்டும் அவசியமில்லையா? என்றேன்.

“வேலையற்றதுகளின் விபரீத எண்ணங்களுக்கு வேலிதானே இந்தத் தாலி?” என்றார்.

காலித்தனம் செய்பவர்கள் கழுத்தையும், காலையும் கவனித்த பிறகே காலித்தனம் செய்கிறார்கள் என்பது கடந்த நூற்றாண்டுச் சிந்தனை. புரியாதவர்கள் வேண்டுமானால் போலீஸ் நிலையப் பதிவேடுகளை புரட்டிப் பார்த்துவிட்டு சொல்லட்டும் என்றேன்.

“பெண்மையை உயர்வுபடுத்தும் இந்த உன்னத பாக்கியத்தை உதாசீனப்படுத்தலாமா நீ?”

இச்சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு உச்சகட்ட மகிழ்ச்சியாக இருப்பது தாலி கழுத்தில் ஏறுவது. அதே பெண்ணுக்கு Thaali7உச்சகட்ட துக்கமாக இருப்பது தாலி கழுத்தில் இருந்து இறங்குவது. எனக்குத் துணைவியாகிறவருக்கு இத்தகைய உச்சகட்ட ‘மகிழ்ச்சி’யும் தேவையில்லை. அதைவிட அதி உச்சகட்ட ‘துயரமும்’ தேவையில்லை.

அது என்னை இழிவுபடுத்துவதாக நினைத்து ஏற்றுக்கொள்ள மறுக்கவில்லை.
அது பெண்ணை இழிவுபடுத்துவதால்தான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்.

இவர் இன்னொருவருடைய மனைவி என்பது பிறரது பார்வைக்கு பிரதான விஷயமெனில்..அதைப்போன்றே ஒவ்வொரு ஆணும் இன்னொருவருடைய கணவன் என்பதும் பிரதான விஷயம்தான். தாலி கட்டுவதென்றால் இருவரும் கட்டியாக வேண்டும். நிராகரிப்பதென்றால் இருவரும் நிராகரித்தாக வேண்டும். இறுதிவரைக்கும் ஒப்புக்கொள்ளவேயில்லை அம்மா.

‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ தொடங்கி ‘தாலி பாக்கியம்; வரைக்கும் தமிழ் சினிமாக்காரர்களால் ஓவ்வொரு பெண்ணின் நாடி, நரம்புகளிலும் ஏற்றப்பட்ட நஞ்சல்லவா அது. (இதில் ”கடவுள்” போன்ற Thaali2திரைப்படங்கள் மாபெரும் விதிவிலக்கு.)

உறங்கும் வேளை தவிர மிஞ்சிய பொழுதெல்லாம் இது குறித்தே விவாதங்கள்…வாக்குவாதங்கள்…

வேறு வழியேயில்லை… சிலவற்றிற்கு இங்கே அறுவை சிகிச்சைதான் அரிய மருந்து. காயம் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் நோயாளி குணமடைவது குதிரைக் கொம்பாகி விடக்கூடும்.

இப்பெண்ணிழிவிற்கு எதிராக வலுவான வார்த்தைகளை வீசியாக வேண்டிய வேளை வந்துவிட்டதாகவே உணர்ந்தேன்.

வேறு வழியேயில்லை..தைரியத்தைத் துணைக்கழைத்துக் கொண்டு துவங்கினேன். சரி..தாலி கட்டுகிறேன்..ஆனால் அதற்கு முன்னால் ஒரே ஒரு கேள்வி….. கேட்கலாமா?

“கேள்”

அப்பாவைத் தூக்கிக்கொண்டு போகும் போது உனது கழுத்தில் கிடந்த தாலியை அறுத்தார்களே…… எப்படியிருந்தது
உனக்கு? அந்த நிலை இன்னொரு பெண்ணுக்கு வரவேண்டும் என இன்னமும் எண்ணுகிறாயென்றால்..ஒன்றல்ல… இன்னொரு தாலிகூட கட்டத்தயார். யோசித்து உன் முடிவைச் சொல்….எதுவாயினும் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினேன்.

மனம் பதைபதைத்தது. அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். ஆயினும் வேறு வழியிருக்கவில்லை.

எங்கள் இருவருக்கும் இடையில் மெளனம் மதர்ப்பாக இருக்கை போட்டுக் கொண்டது.

ஓரிரு நாட்கள் நகர்ந்திருக்கும்.
ஒரு நாள் காலை….”நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்” என்ற அம்மாவை நிமிர்ந்து பார்த்தேன்…

”இனி நானும் உன் கட்சி” என்றாள் சிரித்தபடி.

இல்லையில்லை..விடுதலை விரும்பிகளின் கட்சி என்று சொல் என மறுத்தபடி சிரித்தேன்.

எனக்குத் தெரிந்த தோழி ஒருவரிடம் இது குறித்து பேசிக் கொண்டிருந்தபோது… ‘தாலி புனிதம், தாலி ஒரு அடையாளம் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அந்த அடையாளத்தையே எங்கள் பெண்களில் எத்தனை பேர் வெளியில் தெரியும்படி பேட்டு கொள்கிறார்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம்.

முடிந்தவரைக்கும் அதனை எந்த அளவிற்கு மூடி மறைக்க முடியுமோ அந்த அளவிற்கு மறைக்கவே விரும்புகிறார்கள். பிற நகைகளின் வடிவங்களையும், வண்ணங்களையும் வெளியில் தெரியும்படி மாட்டிக் கொள்கிறார்களே தவிர தாலியை பளிச்சென்று தெரியும்படி தொங்கவிட்டுக் கொள்வதெல்லாம் தமிழ் சினிமாவில் மட்டும்தான். இன்னும் தெளிவாகச் சொன்னால் பெரும்பாலான பெண்கள் இந்தத் தாலியை விரும்புவதேயில்லை என்பதுதான் உண்மை. Thaali5இதை வெளிப்படையாகச் சொன்னால் எங்கே தங்களை இந்த “சமூகம்” ‘தவறாக’க் கருதிவிடுமோ எனும் அச்சத்தை அச்சாரமாகக் கொண்டே இந்தத் தாலி விளையாட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது’ என்றார் எனது தோழி.

ஆக… பத்து வயதுச் சிறுமிகூட பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகும் இக்காலத்தில் தாலி பாதுகாப்பானது என்பது எப்படி சாத்தியம்?

‘தவறிழைக்கும் நேரத்தில் தாலி உறுத்தும்’ என உளறுவது அந்த இனத்தையே கொச்சைப்படுத்தும் ஒரு விஷயமல்லவா?

மணமானவர் என்பதற்கான அடையாளம் அதுதான் என்றால் அந்த அடையாளம் பெண் இனத்தின் மீது மட்டுமே திணிக்கப்பட்டிருப்பது ஏன்? மணமானவன் என்பதற்கான அடையாளம் ஆணுக்கு எதுவும் இல்லையே ஏன்?

இப்படி…
ஏன்… ஏன்… ஏன்… என எழும் கேள்விகளுக்கு விடிந்தாலும் கிடைக்காது விடைகள் ஆணாதிக்க வெறியர்களிடமிருந்து.

வாழ்க்கையின் அர்த்தம் அடங்கியிருப்பது :

தாலி போன்ற சின்னங்களில் அல்ல.

தகுதியான எண்ணங்களில். Widows

(எனது இக்கட்டுரையைப் பிரசுரித்த “பெண்மணி” மாத இதழுக்கு நன்றி – 1998)


நடுத்தெருவுக்கு வந்துவிட்ட “பாட்டாளி”தமிழ் நடிகர்களுக்கு…….

$
0
0

“கலைஞன் என்பவனுக்கு இலக்கணம் ஏதாவது உண்டா….?”

”உண்டு. பஞ்சமாபாதகத்தில் அவன் ஒரு பார்ட்னர்.”
-நடிகவேள் எம்.ஆர்.ராதா.


ஏறக்குறைய இருபது வருசத்துக்கும் மேல இருக்குமுங்க.
கலையுலகத்துக்கும் நமக்கும் உள்ள தொடர்பு.
உங்க படங்கள எல்லாம் பாக்கறதுக்காக….
கியூவுல நின்னு மூச்சு திணறியிருக்கேன்….
முட்டிக்குக் கீழே போலீசுகிட்ட அடிவாங்கியிருக்கேன்….
பஸ்சுக்குப் போக வெச்சிருந்த காசைக்கூட பறிகொடுத்திருக்கேன்.

ஆனா இத்தன வருசம் திரைல மட்டுமே பாத்துப் பாத்துப் பூரிச்ச
உங்க சமாச்சாரங்கள நடுத்தெருவுல பாக்கறதுக்கான வாய்ப்பு
இப்பத்தாங்க கெடச்சுது. இந்தக் “கலைய” வளக்கறதுக்காக
நீங்க ஆத்துற தொண்டிருக்கே தொண்டு….
அது நம்ம சுபாசு சந்திரபோசு செஞ்ச தொண்டுக்கும் மேல.
இப்படிப்பட்ட தேசபக்தருகளுக்கு ஒரு சிக்கல்ன்னா….
அது இந்த தேசத்துக்கே வந்த சிக்கல்தானுங்களே…..

ஆனா…. இந்தக் கலாரசனையத்த கந்தசாமி இருக்கானே…
அவனுக்கு வாய் ரொம்ப நீளங்க….
இந்த நாடே உருப்படாமப் போனதுக்குக் காரணமே நீங்கதானாம்.
நீங்க இல்லாட்டி இந்த ஊர் இளிச்சவாயனுக என்னமோ
அமெரிக்காக்காரனுக்கு முன்னாடியே
அணுகுண்டக் கண்டுபுடுச்சிருப்பானுகங்கிற கணக்கா பேசறான்.

”கந்தசாமி….! சினிமான்னா ஏதோ ஒண்ணு ரெண்டு உருப்படாத கேசு
இருக்கத்தான் செய்யும்.
அதுக்காக நீ ஒட்டுமொத்த கலையுலகையே திட்டித் தீக்காதே…..”ன்னேன்.

அவன் கேட்டாத்தானே…?

“ஒண்ணு ரெண்டு உருப்படாத கேசு இருந்தா நான் ஏன் பேசறேன்?
ஆனா…. உருப்படற கேசே அங்க ஒண்ணு ரெண்டுதான் இருக்கு….
இதுல வேற இவுங்குளுக்குள்ள நாயடி….பேயடி அடிச்சுக்கறதப் பாத்தா
மானக்கேடா இருக்குது…..”ங்குறான் கந்தசாமி.

“கலைச்சேவை” செய்ய வந்தவங்களுக்குள்ள
ஏதாவது பிரச்சனை வராமயா இருக்கும்?
அதப்போயி ஏன் பெருசா எடுக்கறே?”ன்னேன்.

”யோவ் லூசு! இது “கலைச்சேவை” செய்யறவங்களுக்குள்ளே வந்த பிரச்சனை இல்ல…..
கடங்காரனுகளுக்குள்ள வந்த பிரச்சனை.
சினிமாவ எப்படி ஆரோக்கியமா எடுக்கறதுங்கறதுல வந்த பிரச்சனையில்லய்யா….
வாங்குன கடன கட்டாம எப்படி டிமிக்கி குடுக்கறதுங்கறதுல
வந்த பிரச்சனை. அதப் புரிஞ்சுக்கோ……”ங்குறான் கந்தன்.

“என்னது….. கடனா….? யாரு நம்ம நடிகருக வாங்குனாங்களா….?
அவுங்குளுக்கு என்னய்யா கொறைச்சல்…? காரு…. பங்களா…ன்னு
ராசாவாட்டம் இருக்குற அவுங்களப்போயி
கடன் வாங்குனாங்கன்னு புளுகறியே…..
இது உனக்கே நல்லாயிருக்கா கந்தசாமி…?”ன்னேன்.

”இங்க பாரு…. விசயம் முழுசா தெரிஞ்சா பேசு….
இல்லாட்டி ஆளவிடு….”ன்னு கெளம்புனுவனப் புடிச்சு
கெஞ்ச வேண்டீதாப் போச்சு…….

ஒருவழியா சமாதானப்படுத்தி அவனப் பேசவைக்கறதுக்குள்ள
மனுசனுக்குப் போதும் போதும்ன்னு ஆயிருச்சு.

“காத்தால எந்திரிச்சா கைல காசு இல்லாம….
MGRகுடிக்கக் கஞ்சியும்….. தொட்டுக்க ஊறுகாயுமா….
காலந்தள்ளுற உங்க நடிகருக……
சங்கத்துக்கு சொந்தமா ஒரு கட்டடம் கட்டணும்ன்னு முடிவு பண்ணி
ஸ்டேட் பாங்குல இருபத்தி ஐஞ்சு லட்சம் கடன் வாங்குனாங்க……
ஏறக்குறைய பதினெட்டு வருசம் முன்னாடி.

வாங்குனது என்னவோ 25 லட்சம்…..
ஆனா வாங்குன காச ஒழுங்கா கட்டாம…
வாங்குன கடனுக்கு வட்டி மேல வட்டி ஏறி….
இப்ப அது இரண்டரை கோடில வந்து நிக்குது.

அது எம்.ஜி.ஆர். உசுரோட இருந்தப்பவே உருவான கடன் தான்.
அத அவரும் தீக்க முயற்சி எடுக்கல…
அப்பத் தலைவரா இருந்த சிவாஜியும் தீக்கல…
Sivajiஅதுக்கப்புறம் வந்த தலைவர்களும் தீக்கல…
இப்போ இருக்குற தலைவரும் தீக்கல…
இனி வரப்போற தலைவரும் தீக்கப்போறதில்ல…
இது தான் இன்னத்த நெலமை… புரிஞ்சுதா…?”ன்னான்

இதென்னடாது… சினிமாவுலயும் நேர்லயும் சர்ர்ர்ரு புர்ர்ர்ருன்னு
கார்ல வந்தெறங்குற நம்மாளுகளா கடங்காரனுக…?
இவுங்க ஏதோ பாரி வள்ளல் பரம்பரைன்னு நெனச்சுகிட்டு
தியேட்டர்ல நாம விசிலடிச்சுகிட்டு இருந்தா…
இவுங்க நம்மள விட பிச்சைக்காரனுகளா இருக்கானுகளேன்னு
வருத்தமாப் போச்சு….

இருந்தாலும்…. சொந்தத்துல காரு… பங்களான்னு… வெச்சுருக்குற இவுங்க
எதுக்கு பேங்குல போயி கடன் வாங்குனாங்க…?
சரி இவுங்கதான் கேட்டாங்கன்னா…
‘இவ்வளவு வசதி இருக்குற உங்களுக்கு எதுக்குக் கடனு?’ன்னு
பேங்க்காரனுகளாவது கேட்டானுகளான்னு… பல சந்தேகம்…

வாயி சும்மாயிருக்காம அதக் கேக்கப்போயி…
கலாரசனையத்த கந்தசாமி குண்டக்கமண்டக்கன்னு கிழிக்க ஆரம்பிச்சுட்டான்.

“யோவ் அரைப்பைத்தியம்! இந்த நாட்டுல பேங்க்காரனுக என்ன…
உன்ன… மாதிரி அன்னாடங்காச்சிகளுக்கு லோன் குடுக்கவா
பேங்க் வெச்சிருக்கான்… ?
வக்கில்லாதவனுகளுக்கு கடன் குடுக்க இல்லையா பேங்க்கு…
வசதி உள்ளவனுக்கு கடன் குடுக்கத்தான் பேங்க்…

உன்னமாதிரி மொளங்கால் வரைக்கும் வேட்டிகட்டுனவனுகளுக்கு
குடுத்தா அவுங்களுக்கு என்ன லாபம்…?
உனக்கு பதிலா… அஞ்சாறு நடிகனுகளுக்கோ,
nadigar1நடிகைகளுக்கோ கடன்குடுத்தா….
பேங்க்கு மேனேஜரு பக்கத்துல நின்னு
பல்லிளிச்சுகிட்டு போஸ் குடுக்கலாம்…

உன்னப் பக்கத்துல நிக்க வெச்சுப் போட்டோ எடுத்தா
எவன் சீந்துவான் அவுங்கள…? இது புரியாம ஒளறாதே…”ன்னான்.

அதென்னமோ உங்க சினிமாவுல அடிக்கடி வருமே…
கிளாஸ்பேக்கோ…. பிளாஸ்பேக்கோ… அந்தமாதிரி
ஒன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு.

ஏழெட்டு வருசம் முன்னாடி….
பக்கத்துல உள்ள பேங்குல மாடு வாங்க லோன் குடுக்குறாங்கன்னு
நம்ம கருப்பராயன் சொன்னான்னு நம்பி….
நாம்போயி அந்த பேங்க் மகராசருககிட்ட பட்டபாடு இருக்கே…

மொதல்ல வெளீல நின்ன பியூனுகிட்டக் கெஞ்சிக்கூத்தாடி
உள்ளாற போறதுக்குள்ளயே போதும் போதும்ன்னு ஆயிருச்சு…

உள்ளாற போன…
”சொந்தமா எடமிருக்கா…?”ன்னான்

இல்லே…ன்னேன்

“வேறு ஏதாவது சொத்து பத்து இருக்கா…?”ன்னான்

அது இருந்தா நா ஏன் இங்க வர்றே…ன்னேன்

“உம் பொண்டாட்டி பேர்லயாவது இருக்கா…?”ன்னான்

அதுவுமில்லே…ன்னேன்

“உனக்கு கடன்குடுத்தா நிச்சயமா நீ திருப்பிக் கட்டுவேங்குறதுக்கு
உத்தரவாதக் கையெழுத்துப் போட ரெண்டு பேர் இருக்காங்களா…?”ன்னான்…

ஓ…. இருக்காங்க…. நம்ம வறட்டி தட்டுற சின்னப்பனும்…
மாடு மேக்கிற அமாவாசையும் போதுமா…?ன்னேன்

“அவுங்கெல்லாம் ஆகாது…
நீ ஒழுங்காக் கட்டலன்னா அவுங்ககிட்ட ஜப்தி பண்றதுக்கு
கோவணத்தத் தவிர வேறென்ன இருக்குது…?
அதுனால ஊருக்குள்ள யாராவது ரெண்டு ‘பெரிய’
மனுசனுகள கையெழுத்துப் போட கூட்டிட்டு வா…

வர்றப்ப… ரெண்டு பேர சாட்சிக்கு வேற கூட்டிட்டுவா….

அப்படியே மறந்திடாம மாடு புண்ணாக்குதான் திங்கும்குறதுக்கு
சர்ட்டிபிகேட் ஒண்ணையும் உங்க ஊர் வக்கீலுகிட்ட வாங்கீட்டு வா…”ன்னான்

இவனுககிட்ட இத்தன லோல்பட்டு கடன் வாங்குறத விட…
காக்கஞ்சி குடிச்சுட்டு காலத்த ஓட்டறதுதான் செரீன்னு முடிவு பண்ணி….
மாடாவது மண்ணாங்கட்டியாவதுன்னு நடையக் கட்டீட்டேன்….

“ஏங் கந்தசாமி…. மாட்டு லோனுக்குப் போன நம்மளையே
அந்தப்பாடு படுத்துனாங்களே இந்த பேங்க் ஆபீசருக…..
25 லட்சம் கேட்டுப் படியேறுன நம்ம “கலைஞருகள”
என்னபாடு படுத்தீருப்பாங்க….?ன்னு கேட்டேன்.

கடுப்பாயிட்டான் கந்தன்.

“வெவரம் புரியாமப் பேசாத….
ஏற்கெனவே ‘இந்தியன் பேங்க்’ வெவகாரத்துல
பல ’தன்மானக் காங்கிரஸ்’ தலைக உருண்டுகிட்டுக் கெடக்குது…..
குள்ள பத்மினிக்குக் குடுத்தது…..
குண்டு பத்மினிக்குக் குடுத்தது….
எல்லாம் ‘கோவிந்தா’ ஆயிப்போயி……
இப்ப பேங்க்கயே பெனாயில் போட்டுக் கழுவீட்டு இருக்கானுக.
இத்தன சட்டதிட்டங்களும் உன்ன மாதிரி
இளிச்சவாயனுகளுக்குத்தான்.

நடிக நடிகையருக்குன்னா…..
நாக்கத் தொங்கப்போட்டுகிட்டு குடுப்பாங்க நம்ம ஆபீசருக……
புரிஞ்சுதா……?”ங்கறான் நம்ம கலாரசனையத்த கந்தசாமி.

இடைல எந்தப் பொழுதுபோக்குமே இல்லாம நாளு நகர்ந்துகிட்டு இருக்க…..
திடுதிப்புன்னு ஒரு நாள்……
“நடிகர் சங்கத்தில் கலாட்டா….”
“காது கிழிந்தது…”
”நாற்காலி பறந்தது”
ன்னு பத்திரிக்கைகள்ல பக்கம் பக்கமா செய்தி.

ஊர் ரெண்டுபட்டா
கூத்தாடிக்குக் கொண்டாட்டம்ன்னு கேள்விப்பட்டிருக்கேன்….
ஆனா…..
Radharaviகூத்தாடிகளே ரெண்டுபட்டா
பத்திரிக்கைகளுக்கு சந்தோசம் இல்லாம இருக்குமா…..?

ஆனா…. எனக்குத்தான் வருத்தமாப் போச்சு…..
“கலை” ஒலகமே இப்புடி ரெண்டுபட்டா….
இந்த நாடு என்னாகறது?
இந்த சனங்க அடுத்தவேளை சோத்துக்கு
என்ன பண்ணுவாங்கன்னு ஒரே கவலையாப் போச்சு.

நடிகர் சங்க கலாட்டாவுல நீங்க எல்லாம்….
“கடன்கார ராதாரவி ஒழிக”ன்னு ஒரு புறமும்…..

“கடனடைக்க வர மறுக்கிற கடன்கார விஜயகுமார் ஒழிக”ன்னு மறுபுறமும்
Vijayakumar_alterமாறி மாறி நின்னு உங்க “கொள்கை முழக்கங்கள”
முழங்கியதப் பாத்து புல்லரிச்சுப் போச்சுங்க.

இதுல வேற நம்ம காந்தியார்கூட
உப்பு சத்தியாக்கிரகத்துல கலந்துகிட்டு
தேச சேவைக்கே தன்னை அர்ப்பணிச்சுகிட்ட
‘தியாகி’ மாயாவோட ஜாக்கெட்ட
யாரோ ஒருத்தரு கிழிக்க…..

இந்தத் ’தியாகி’ அவுங்களக் கடிக்க….

சரத்குமாரோ யாரோ புடுச்சுத் தள்ள…..

அவுரு இவரத்தள்ள….

விஜயகாந்த் குதிச்சு வந்து சமாதானம் பண்ண…..

உடனே ஒரு கோஷ்டி சட்டசபை கணக்கா ‘வெளிநடப்பு’ பண்ண….

ஒருத்தன் “டேய் மான்ங்கெட்டவங்களா”ங்க…….

இன்னொருத்தன் “நீங்கதண்டா அது”ங்க…..

போதாக்குறைக்கு நம்ம பத்திரிக்கைக
“மாயா கடிபட்ட இடம் இதுதான்”ன்னு
முதுகுல அம்புக்குறி வேற போட்டு போட்டோ போட……

”நல்லவேளை கடிச்ச மகராசரு
Mayaமுதுகுல கடிச்சாங்களே”ன்னு
சனங்கள நிம்மதிப் பெருமூச்சு விடவெச்சுட்டீங்க.

அதுக்கப்புறம் நீங்க மாத்தி மாத்தி குடுத்த அறிக்கைக இருக்கே…….

அட…… அட……..

(இடைவேளை)

Inter

(இதன் கண்றாவி கிளைமேக்ஸ் நாளை…….)

நன்றி : குமுதம் ஸ்பெஷல் – 1997


Viewing all 103 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>